Wednesday, May 14, 2014

விரகம்...



திறந்த மார்பில்
படர்ந்த எந்தன்
குழல் நீவி கேட்கிறாய்
அன்பே
தேனூறும் உன்
இதழ் சுவைத்தேன்
வெண்டனய
விரல் இணைந்தேன்
வாழை  தண்டுகள் இரண்டில்
மென் தலை அமிழ்ந்தேன்
எனினும்
என் நெஞ்சு கொண்ட பேறு
என் கைகள் கொள்ளாதோ
கண்கள் கண்ட
 மது கிண்ணம் நுகர
 இதழ்கள் வேண்டாவோ..

விந்தையாய் உன்
விழிகள் நுழைந்தேன்
விரக விதையில் வீழ்ந்தேன்
விருட்சமாய் ஆசைகள் வீழ
வேண்டுமோ என்றன விழிகள் ..

விழிகளின் விரகம் உணர்த்து
விரதம் உடைத்து
விருந்து காண விரைந்திடும்
விரல்கள் பற்றி
வினாவொன்று கொள்கிறேன்
மடை தீண்டி விடாதே
உடைந்து விடும் அணையின்
வேகமும் ஆழமும்
உன்னை உயிர் உருக்கொள்ள
செய்திவிடும்
உந்தன் கரு சுமக்க நான் தயார்தான்
காலமெல்லாம்
என்னை உயிர் சுமக்க நீ என்றால் ..

Tuesday, May 13, 2014

விண்ணப்பம் ..



உயிர்வழி
உருகும் வலி
பருகிடும் நீ
பாவி என் பாதி ...

கதிர் ஒளிகாணா
காந்தள் இவள்
காய்ந்த சருகாய்
கனதியிழந்து கனக்கிறாள் ..

வற்றாத ஜீவ நதியில்
வழிந்தோடும்
நீர்  அலையில்
நினைவுச் சுழல் உந்த
நீர்ந்து தீர்கிறது ஆத்மா ..

எரிந்து கழிந்த
எதிர்பார்ப்புகள் எலாம்
ஏலம் கேட்கிறது
எதிர்கால ஆசைகளை
வருந்தி அழைக்க
வாய்பிளந்து கிடக்கிறது
வாழ்க்கையின்
பாதைகள் ..

விடிந்திடும் வானமதில்
விடியாத ஒரு பாகமென
முடியாத பந்தங்கள்
முடிச்சிட்டு மகிழ்கிறது
பிரியாத நினைவுகளிடம்
பிரியமாய் ஒரு விண்ணப்பம்
முடியாத கனவுகளை
முழுவதுமாய் எரித்துவிடு
முகவரியாவது எச்சமாகட்டும் ...

Tuesday, May 6, 2014

நினைவு...



உன் விலகுதல்கள்
நினைவுகளால்
நிரப்பப் படுகிறது ..
அதன் நிறைதலிலும்
வழிதலிலும்
உடைந்து சிதறுகிறது
புன்னகை பூக்கள் .

ஓர் நிலாக் கால
வெகு தூர பயணத்தில்
அமானுஷ்ய கணங்களாக
உன் பிரிவுகள் சுமந்து
நகர்கிறது பொழுது ..

அடிக்கடி
நினைவுகள்
கிள்ளிப்பார்கிறது
வாழ்தலின் நிச்சயத்தை
உன் விலகுதலிலும்
உயிர் வாழ்கிறதா என ..

உன் உறக்கங்களை
மௌனமாய் ரசிக்கிறேன்
ஒரு நிலவென நுழைந்து
நிறைகிறாய் ஒளியென ..
வரைகிறேன் உன்னை
வளைகிறாய்
என் நினைவுகளில் மட்டும் .

நிஜங்களை தொலைத்து
நினைவுகள் தேடிய பயணத்தில்
உதிரிகளாய் நிறைகிறாய்
உளமெங்கும் ..
உன் வளமெங்கும் வாழ்ந்துவிட
மனம் ஏங்கும் இவள் ....

Sunday, May 4, 2014

மோகம் --



உன்
இறுகிய அணைப்பில்
திமிறிய மார்புக்குள்
நுழைந்து நுகர்கிறாய்
நிமிர்ந்து வளைகிறது
தளிர்ந்த பென்மைகளின் மென்மை ...

இருள் சூழ்ந்த
கரு மேகம் தலைமுடிக்குள்
நுழைந்து இழுத்துக்கொள்கிறது
கரை உடைத்த மோகம் ..

வெகு நேர தாகத்தில்
வெகுண்ட வெண் குடங்கள்
மிரண்டு சிவக்கிறது
உன் வேகத்தில் ..

முகுள் கொண்ட
உன் என் மோகவெப்பத்தில்
மெழுகாகி
உருகி வழிகிறது  மோகம்

இதழ் கொண்ட தாகத்தில்
இமை கொண்டு மூடும்
விழி வரையும்
எழுதப்படாத காவியம்
தீண்டலில்
தீட்டப் படுகிறது
ஒரு மோகன சித்திரமாய் ...