Tuesday, September 25, 2012

விழி மொழி

 
தென்றலின் சிலு சிலுப்பில்
மழைத்துளிகள்
ஈரத்தை உலர்திகொண்டிருந்த
அழகிய மழைகாலம்...
சிறு சிறு துளிகளாய்
அங்கொன்றும் இங்கொன்றுமென
தெறித்து விழும் துளிகளை உதறி
மரங்கள் தம் உலர்வை உறுதி படுத்தி கொண்டிருந்தது ....

வட்டமாய் ஒரு சிறு நீர் தேக்கம்
அதில் வரி வடிவமாய்
நீர் துளிகளின் அலை வடிவம்
எட்டி நின்று பார்த்தவள் மனதில்
எழுந்து நின்றாடிய சலனங்கள் ..

ஏழடி உயரம்தான் அதில்
எஹ்கு நானின் விறைப்புதான்
சற்றே திரும்பினாலும்
சடுதியாய் சாய துடிக்கும்
சாலை ஓரத்து ரோஜாக்கள்
அவன் பார்வைக்காய் தவம் இருக்கும்
எட்டி நடக்கும் அவன் பாதசுவடில்
எழுதப்படாத பல காதல் கடிதங்கள்
விழுந்து சிதறும் ...
எதற்கும் அசராத அவள் இதயம்
இவன் எடுப்பாய் சிரிக்கும்
புன்சிரிப்பில் தடுக்கி சாய்கிறது...

மனதுள் பல கற்பனை..
இதிகாச நாயகன்
யுகம் தாண்டி பிறப்பு எடுத்தானோ ?
இளமாறன் இவன் இளமார்பை
ஏதும் இளம் பூவை சூடி இருப்பாளோ ?
இவன் பெயர் யாதாய் இருக்கும் ..?
மலர் கண்ணனா ? மன்மதனா ..?
ஸ்ரீராமனா ..? என் சிந்தை கவர்ந்த சீராளனா ?
சிந்தை மயங்க நெட்டி தள்ளும் பொழுதை
நிந்தை செய்தவாறே மன்னன் அவன் வருகைக்காய்
மான் விழியாள் மனம் துவண்டாள் ....

நெட்டி தள்ளிய பொழுதை
குட்டி பொழுதாக்கி ..
அவள் மனக்கதவை தட்டி திறந்த
கெட்டிக்காரன் எட்டி நடை போட்டு வந்து சேர்ந்தான்...
அலர் தாமரை கண்கள் அவளிடம் அவசரமாய் பாய்ந்து மீள
ஆயிரம் கதை சொன்னான்
அன்றலர்ந்த செந்தாமரையாள் அகம் நோக்கி
அவள் புறக்கண்ணால் தேக்கம் கண்டாள்...

மீன் விழியின் தவிப்பு
அவன் தணல் விழிகளுக்கு தப்பவில்லை
அனல் என துடிக்கும் அதரங்களின் அசைவில்
கனல் என அவன் நெஞ்சம் கரைந்து கொண்டு இருந்தது
கருத்த விழியில் குன்றி மணி போல்
குறு குறுத்து கொஞ்சி விளையாடும்
மங்கை அவள் விழி
மாறன் இவன் விழிக்கு விருந்தாகி பலநாட்கள்...

மலர் விழியும் மீன்விளியும்
மனதோடு கலந்து
மருண்டு உறவாடி மகிழ்ந்து விளையாடி
மயக்கும் மொழிகள் பேசி
மது உண்ட வண்டுகளாகி
கூடி பிரியும் குறுகிய அந்த
வண்டி தரிப்பிடத்தில்
எதிரும் புதிருமான
எழில் விழி காதல்
என்றும் வாழ்கிறது
எதிர்கால நம்பிக்கைகளை
பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு ..

Friday, September 21, 2012

ப்ரிய சிநேகிதா .....

 
 
ப்ரிய சிநேகிதா !

அன்று உன்மதி முகத்தில்
வீழ்ந்து தெறிக்கும் புன்னகைகளை
களவாய்ப் பொறுக்கி பதித்து கொண்டேன் - என்
இதழோரங்களில்

எத்தனையோ எதிர்பார்ப்பு - நம்
இம்ஷைகளில்
என்னுள் வீழ்ந்து தவிக்கும்
தனிமையிலுன் விம்பம் மட்டுமே
தரித்துச் செல்கின்றதென்
மனவெளியில்

என் வீட்டு ஜன்னலோரமாய்
அடிக்கடி வீழ்ந்து கிடக்கும்
நம் பால்ய பருவத்து அசைவுகளில்
சாம்ராஜிய காதலுணர்வுகளை
சடுதியாய் சேகரித்துக் கொண்டேன்
நாளைய நம் வரலாற்றிற்காக


என் மனப் பிரபஞ்ச வெளியின்
ஒற்றை நிலா உன்னில்
சூழும் அந்த கார்மேகக் கசிவால்
அழுது வடிகின்றது என் ஆத்மாவும்


தென்றலின் மோதுகையில் கூட
நொந்து துடிக்குமென் மேனிதாங்குமோ
பிரிவின்அகோரச் சீண்டலை
அடிக்கடி உள்வாங்கும் போது..
கண்ணீர்த்துளிகளாய் இறங்கி
தொட்டுப் பார்க்குதேயென்
கன்னத்தையும் சேர்த்தே..

நம் கனவு முகங்களைக் கிறுக்கிச் சென்ற
அந்த விதியைச் சபிப்பதிலேயே
இப்பொழுதெல்லாம் - என்
பொழுதுகளின் நிமிடங்கள்
பொறுப்போடலைகின்றன - நான்
அறியாமலே

கலைந்தோடும் மேகங்களில் - நான்
முடித்து வைத்த தூதோலைகளின்
கற்பை
துவம்ஷம் செய்யும் காற்றை- நான்
விரட்டும் போராட்டம் கண்டு
பேச்சற்றுக் கிடக்கின்றன - பல
கரும்பாறைகள் தம் வலிமையை
என்னுள் கண்டு

பனிப் பாறை தன்னுள் உறைந்து கிடக்கும்
என் காதல் ஞாபகங்களை
பிய்த்தெறியத் துடிக்கும்
சூரிய உஷ்ணம் கூட
விரண்டோட தருணம் தேடுகிறது
என் பெருமூச்சின் வெம்மை கண்டு

சிலுவையில் அறையப்பட்ட என் காதலின்
செந்நீர்த்துளிகளால்
சிதையும் என் இருதயத்தின் இருப்பும்
மனுக் கொடுத்து மன்றாடுதே - என்
உயிரனுகளில் இன்பம் மீள சேரவே

காத்திருகின்றேன்
என் காதல் யாகத்தின் வலிமை
வேரூன்றும் உன் காலடியோரம்- அது
உன்னுள் எட்டிப் பார்க்கும்
புன்னகைப் பூக்களின் நந்தவனமாய்
நிதமும்

என் நெஞ்சக் கூட்டில்
மோதியெழும் கடலலைச் சங்கமம் இனி
சந்தத்துடன் இசையாகு மோர் நாள்- என்
காதல் சாம் ராஜ்ஜியத்தின் சரித்திரத்தை
எம்முள் விட்டுச் செல்லும் இனிதாய்

காத்திருகின்றேன் அதே காதலுடன் ..

உன்னை சேராத கடிதம்

 
உன் மௌனங்களை தேடியே
மரணித்து விழுகிறது எண்ண திவலைகள்
உன் எச்சங்கள் எல்லாம்
மிச்சமாய் நின்று
என் விரதத்தை மிரட்டுகின்றது

நாசி துவரதுள் புகும்
உன் நினைவு சுமந்த
தென்றல் காற்றும்
ஊசியாய் உள் புகுந்து
என் சுவாசப் பையை
சல்லடைகளாய் துளைத்து செல்கிறது

இறுக்கி பிடிக்கும் இதய நரம்புகளும்
தளர்த்தி தவிக்கும் உடலின் அசைவுகளும்
உறைந்து கிடக்கும் நினைவு பாளங்களும்
விடுதலைக்காய் வெம்பி தவிக்கும்
விசித்திரமான உணர்வை சுமந்து
வெளி வரும் நீளமான மூச்சு முன்டியடிப்பும்
உன் இல்லாமையின் நிஜத்தை
செதுக்கி செல்கின்றது ..

என் இயலாமையின் கருக்கொண்டு
எழுதுகின்றேன் ஒரு கடிதம்
உன்னை சேராத உன்னவளின்
ஊன் உருகும் உறைநிலை கடிதங்களுள்
இதுவும் ஒன்று ...
 

Wednesday, September 19, 2012

தரிசனம் தந்துவிடு

 
தெருவோரமாய் சில சில்வண்டுகள்
சிரித்து சென்றது போல்
மனதோரமாய் சில
மகிழ்வோசைகள் உரசி சென்றது ..
நிலவும் இரவும்
உரசி கொள்ளும் இராக்காலம்
அவன் நினைவும்
என்னை உரசிக்கொண்டு
உலா போகும் ...


ஏகாந்தமாய் இரவினை தழுவும்
இனிய தென்றலும்
அவன் மகரந்தங்களை
மனதுள் வீசி செல்லும்
நினைவுகள் கருக்கொண்டு
கனவுகளை பிரசவிக்கும் ..
அந்த இன்பங்களின் வெளிப்பாடாய்
சிரி பூக்கள் உதட்டில் பூக்கும் ...


நீண்ட நாசியும்
மதுவில் தோய்ந்த
மயக்கத்தோடு கண்களும்
கோவை இதழ்களை
காவு கொள்ளும்
பரந்த இதழுடன் வாயும்
பாவை எண்ணத்துள் வந்து
பருவத்தை கிறங்கடிக்கும் ..


ஒரு வாய் அமுததுக்காய்
உலகமே வெறுக்கும்
அவன் அருகாமைக்காய்
அங்கம் ஏங்கும் .
ஏக்கத்தின் வரட்சி
மனதினுள் இறங்கி
உதட்டினை உலர்த்தும் ..

இன்ப கனாவை
இரவல் எடுத்து
துன்ப லகரியில்
துவண்டு மருளும்
கண்கள் தனுக்கு
காட்சி கொடுக்க
அன்பே ஒரு முறை
தரிசனம் தந்துவிடு

Tuesday, September 18, 2012

காலம் முழுமைக்கும்

சிவப்பாய் அடிவானம்
சிவக்கும் மாலை காலம்
சில்வண்டும் சிறு நண்டும்
சிலு சிலுத்து கிறு கிறுபபூட்டும்
அலை வந்து கரை சேரும்
அரை நொடிக்காய்
அடிக்கடி ஏங்கும் கரைதனில்
அலைந்தாடும் எண்ணங்களோடு நான் ..


சிறு கோடாய்
கடலின் சமாந்தரதுள்
சிறுக அமிழும் சிவந்த சூரியன்
ஒரு கோடாய் நிலவின் வரவை
உறுதி செய்ய இருளை பகிர்ந்தான் ....
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அலையாடும் படகோடு
அலைந்தாடும் நிலவொளி கடல்தனில்...


கரைக்கும் அலைக்கும்
கடலுக்கும் எனக்கும்
இடைவெளி சிறிது தான் ...
இருந்தும் அனைத்தையும் ரசித்தேன் ..
அவனோடான என் நகர்வுகளுக்கும்
இடைவெளி கொடுத்திருந்தால்
இந்த அவலங்களும் அலர்ந்து இருக்காதோ ...


மினுக் மினுக்கென
மின்னும் நட்சத்திரங்கள் அவனால்
மிகைபடுத்தி அலங்கரிக்கப்பட்ட
இது போன்ற ஒரு மாலை
நினைவுக்குள் வந்து போனது ...

நினைவுக்குள் புகுந்து
நிகழ்வுகளில் தாகம் செயும்
அவன் நினைவுகளை
இந்த அலைதனில் கழுவ முடிந்தால்
காலம் முழுமைக்கும்
கடலுக்கு நான் கடமைபட்டவள் .
 

எச்சி

alone full moon night picture and wallpaper

தெருவிளக்கின் ஒளி வீச்சில் ¨
விழிகளின் அங்கஹீனம்
விரட்டியடிக்க
விடை தெரியாத விட்டிலாய்
விழுந்து கிடக்கிறது
சாலையை நோக்கிய
என் காதல் பயணம் ..


புரியாத மேடுகளாயும்
தெரியாத கோடுகளாயும்
தெரிந்த சில கோணங்கள் ஆலும்
செதுக்கப்பட வாழ்க்கை
சிறிதும் சுவாரசியம்
அற்றதாகி விடுகின்றது
சில தோல்விகளின் முடிவில் ..


துயரத்தின் துயரை சுமந்தே
கண்களின் எடை அதிகரிக்கின்றது
அடிகடி நினைவலைகளில் மூழ்கும் போது...
கனவுகளை காவு கொடுத்த நெஞ்சம்
கதறி துடிப்பது
தெருநாய்க்கு கேட்டிருக்கும் போலும்
ஒரு பாடாய் ஊளை இடுகின்றது
ஊமையான என் உணர்வுகளுக்கு உடன்பட்டு ..


நிசப்தத்தின் ஆடை கிழித்து
நீளமாய் ஒரு கேவல்
நிதானத்தை இழக்க செய்கின்றது
ஆழமாய் நேசித்து
அவலமாய் உதறிய உன்னை நினைத்து ...


எச்சியாய் நினைத்து
எள்ளி நகையடியபின்
மனதறையில் பள்ளி கொண்ட உன்னை
பட்டென்று தூக்கி வீசிவிட முடியவில்லை
சட்டென்று தூக்கி வீச
தடுக்கி விழுந்தும் எழுந்து
உன் பெயர் சொல்லி துடிக்கும்
இதயத்து தெரியாது
அவமானங்களும் அலட்சியங்களும் ....
 

Friday, September 14, 2012

சும்மா

 
 
 
விழுந்து எழும்பியும்
விழுந்ததுக்கு விஞ்ஞான விளக்கம்
விவரமானவன்னு ஊர் சொல்லிச்சு ...


சாப்பாட்டுக்கு வழி இல்லை
சகபாடியும் உதவவில்லை
சந்தில் இருந்த சாப்பட்டுகடையில்
சால்னாக்கு துட்டில்லை
சாயாவும் ஒரு ரொட்டியும் சாபிட்டான்
டயட் உடலை கட்சிதமாய்
பார்க்கின்றான் என்று ஊர் சொல்லிச்சு ...


எங்கு சென்றாலும்
குனிந்த தலை நிமிராத
குலமகனாய் சென்று வந்தான்
பெண்பிரசு பேச்சுமில்லை
பிறர் பெண்டிர் நாட்டமும் இல்லை
காசு இருந்தால்தானே களியாட்டம்
கன்னிகள் கூட்டம்
புரிந்தவன் குனிந்தான் - கண்ணியவான்
ஊர் சொல்லிச்சு ...


சும்மாவே உக்காந்து
சுகத்தை அனுபவித்து
சுதந்திரமாய் நடந்தவனை
ஒரு குரல் கேட்டது ...
தம்பி சும்மா இருப்பது
உனக்கு சுகமாய் இருக்குதா......?
சுருக்கமாய் சொன்னான்
நீயும் சும்மா இருந்து பார்
சும்மா இருபதின் கஷ்டம் சுகமா புரியும் என்றான் ...
வாஸ்தவம் என்று ஊர் சொல்லிச்சு ...


அவனை கெடுத்து அவனல்ல ஊர்
அது உன்னையும் கெடுக்கும்
உலகையும் கெடுக்கும் ...
புகழ்ச்சிக்கு இடம் கொடுத்து
உனக்குள் இருக்கும்
முயற்சிகள் தூங்கிவிட்டால் ...

காதலித்து பார் ....

 
காதலித்து பார் ....


கண நேரம் கூட
பிரியாது தவிப்பாய்
கண்ணாடியை -காதலித்து பார்


சிறு கரும் புள்ளி தெரிந்தால்
கவலைகளின் ரேகைகளை படர விடுவாய்
காலமே
உன்னை காவு கொண்டதுபோல் -காதலித்து பார்


விடிகாலை வரை
விரல் நுனியில் நடமிடும்
கணனியின் தட்டு தளம் கூட
தட்டு தடுமாறும் சூடாகி - காதலித்து பார்


தெருவோரம் நிக்கும்
சொறி நாயும் பார்க்காது
இருந்தும் ஊரே பார்ப்பது போல்
உள்ளுக்குள் தோன்றும் -காதலித்து பார்


சந்தேகங்களை குத்தகைக்கு எடுத்து
அவை உன் மனசை பேய்வீடாக்கும்
மணிக்கூண்டின் மணி எல்லாம்
மரண ஒலியாகும்அந்நேரம் -காதலித்து பார்


நிலவோடு பேசுவாய்
நீர் நிலையோடும் பேசுவாய்
கனவோடும் பேசுவாய்
காத்திருக்கும் உன் உறவுகளோடு மட்டும்
பேசாது போவாய் -காதலித்து பார்


மாதம் பிறந்து
முதல் பத்து நாள் சென்று
பின்வரும் ஈர் பத்து நாளும்
உன் மணிபர்சில் சனி இருக்கும் -காதலித்து பார்



பொட்டு வைப்பது மறக்கும்
பொருட்டாய் வேலை செய்வது மறக்கும்
பொறுமைக்கும் உனக்கும்
இடைவெளி அதிகமாகும் - காதலித்து பார்


கனவுகளின் ராஜ்யத்தில்
நீ மகாராணி ஆவாய்
நிஜங்களின் போராட்டத்தில்
வினா தாளாவாய்- காதலித்து பார்


காதல் தேசத்தில்
கனவுகள் மட்டுமே நிஜம்
அதில் நீ ராணியாகு -நிஜத்தில்
ஜாசகி ஆகும் வரை

வாழ்த்துக்கள் ..

உயிர்வாங்கி

 
தென்றல் அவிழ்ந்து
தன்னிலைக்கு
திரை போட்டவண்ணம்
எண்ண கதவுகளை தட்டி திறக்கின்றது
வண்ணப் புள்ளிகள் வாய்த்த கோலங்களும்
வருத்த புள்ளிகள் தோய்ந்த சோகங்களும்
முண்டியடித்து முன்னே வர
சடுதியில் முன்னிலை
வருத்தம் தோய்ந்த சோகங்களுக்கே ...


கைப்பிடி அளவு இதயம்
அதில் கடுகளவும் இடமில்லாது
பெருமளவு இடத்தை பிடித்தாய்
பட படவென கற்பனையில்
காதல் தாஜ் மகாலை
சாஜகனுக்கு நிகராய்
என் மன பிரதேசத்தில் கட்டி முடிதேனடா ...


கொலுவாக உன்னை வைத்தேன்
வலுவாக அதில் என்னை தைத்தேன்
பதிலாக நீ உன்னை தந்தாய்
பலகாலம் என் உயிரை மேய்ந்தாய்
மேய்ந்தாலும் வளர்ச்சி
மிருதுவாய் இருந்தது
சாய்ந்தாடும் உணர்ச்சி
சடுதியாய் வந்தது
பாய்ந்தோடி உன்
பருவத்து ஆசைக்கு
விருந்தாடி மகிழ்ந்தேன்
வினையாகி போகுமென்று
எள்ளளவும் எண்ணாது
மருந்தாகி மகிழ்ந்தேன் ...


பாசத்தில் நீ சளைத்தவனில்லை
நேசத்தில் நீ குறைந்தவனில்லை
தாகத்தில் நீ தளர்ந்தவனில்லை
என் மீது மோகத்தில் நீ சளைத்தவனில்லை
இருந்தும் உன் வாழ்க்கைக்கு
நான் உகந்தவள் ஆகாது போனேனே ..


தென்றலும் தீண்டும் நிலை தெரியாது
திக்கி திணறுகின்றது
முந்தானை மடிப்புகளில்...
மூச்சு காற்றின் அனல் வீச்சில்
முனு முணுக்கும் கொசுக்கள் கூட
முனகல் மறந்து முறைத்து செல்கிறது ...
இதய சதுக்கத்தில்
உன் நினைவுகள் பிறழ்ந்து தவழ்கின்றது ..
தழுவிடும் உன் கரங்களுக்காய்
தவியாய் தவித்திடும் என் வனப்பு
மறியல் போராட்டம் செய்கிறது
மனதை மறித்து ...

ஏன் ...
பிறளாத உந்தன் காதல்
மருளாத எந்தன் நேசம்
மணல் வீடாகி கரைந்தது ஏன்?

ஒஹ் தாஜ் மகாலில்
உன்னை தரையிறக்கம் செய்ததாலா ...
பல உயிர்களை பலிவாங்கி
உலக சரித்திரத்தில் இடம் பிடித்த
ஒரு கல்லறையின்..
காதல் கல்லறையின் சரிதிரமல்லவா ..
அதனால்தான் நம் காதல்
என் உயிர்வாங்கி
அங்கு வாழட்டும் என்று விட்டு விட்டாயா ?

வாழ்வேன்
கல்லறையிலும் கருவறைகளில்
உன் நினைவலைகளை சுமந்தவண்ணம் ...