Friday, July 27, 2012

தனிமை...





நகரும் மணித்துளிகள்
நரகமாய் கனக்கிறது
உன்னை அழைக்க
ஒவொரு கணமும்
என் உயிர்வரை துடிக்கிறது
உணர்வுகள் தடுக்கிறது ..
கலைந்து போகும் மேகங்களே
என் காதலும் உங்களை போல்தானோ
தேவைக்கு மட்டும் கூடி பிரிகிறதே
தனிமையை தவிர்க்க
தத்தளிக்கிறேன் ...
உன் நினைவுச்சுழல்
என் உயிர் வரை உருவும் பொழுது ....




நினைவுகள் ....



இன்று என் நினைவு
அற்றுபோய் இருக்கலாம்
என்றோ ஒரு நாள்
என் நினைவுகள்
உன்னை தழுவும் போது ..
அந்த தருணத்திலும்
உன்னை நேசித்து கொண்டிருப்பேன்


நீ



தொலைவாய் நீ
தொலைகிறேன் நான்
தொடரும் உன் நினைவுகள்
தவிக்கிறேன் நான்
எத்தனை ஆசை
எத்தனை கனவு
எத்தனை ஏக்கம்
அத்தனையும் புதைத்து விட்டாய்
அந்தஹாரமாய் என் மனம்
அமைதி இழந்து தவிக்கையில்
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது ..?
ஒஹ் நீதான் என்னை காதலிக்கவில்லையே ..



உன் மடி சாய்ந்து




அன்பே
அணு அணுவாய்
உன்னை நேசித்தவள் நான்
அனுதினம் உன்னை பூஜித்தவள்
அடங்காத ஆசைகளை ஜாசித்தவள்..
இன்று அடுத்து என்னவென்று
தெரியாத ஏக்கம் என்னுள்
இனம் புரியாத தவிப்புகள் உள்ளுள்
என் இதயத்து ஆசை எல்லாம்
ஒரு தடவையாவது
உன் மடி சாய்ந்து
என் மரணத்தை நேசிப்பதுதான் ...