Wednesday, May 30, 2012

வேண்டும் ..




ஒரு நொடி போதும்
உன்னை உளமார உயிர்தொடுகின்ற
ஒரு நொடி போதும்


பல மணி போதும்
உன்னில் பூவாக நான் சாய்ந்து
மணம்வீசும்
பல மணி போதும்


பல இரவுகள் வேண்டும்
பகலோடு நான் காணும்
துன்பங்கள் தூசாகி
லேசாகி உன் மடி சாய
பல இரவுகள் வேண்டும்


பல யுகம் வேண்டும்
உன் நினைவோடு உறவாடி
நிழலாக தொடர்கின்ற
பலயுகம் வேண்டும் ..

No comments:

Post a Comment