Wednesday, August 29, 2012

கரும்பாறை

 
 
 
 
இருளை விழுங்கி
ஒளியை உமிழ்ந்து கொண்டு
நிலவு நகர்ந்து கொண்டிருந்தது
என் நினைவும்
விருது பெறக்கூடிய நம்
காதல் பேச்சுக்களை அசை போட்ட வண்ணம் ....

என் மன சிறகில்
உன்னை மணாளனாய் வரித்து
பயணிக்க துடித்தேன் - நீயோ
வெட்ட வெளி தன்னில்
கரும்பாறை போல் இறுமாந்து இருக்கின்றாய் ..

நம் சந்திப்புக்களின்
சிலிர்ப்புக்களிலெல்லாம் - இப்போது நீ
சினம் தடவி தீப்பிழம்பாகின்றாய்..

இன்பத்தை விரட்டி - நம்
வசந்தங்களை மிரட்டி
நீயறைந்த ஆணி - என்
தனிமைச் சுவருக்குள்
என் சிறையிருப்பை
உறுதிப்படுத்துகின்றது....

காணமல் போகும் கனாக்களை
தேடி தேடியே நான்
நடைப்பிணம் ஆகிறேன் ..

இப்போது
ரணமாகிப் போன உன்
பிரிவின் கணங்களுக்காய்..........
பிரார்த்தித்து - என்
உதடுகளும்
முடமாகிப் போகின...

No comments:

Post a Comment