Friday, September 14, 2012

காதலித்து பார் ....

 
காதலித்து பார் ....


கண நேரம் கூட
பிரியாது தவிப்பாய்
கண்ணாடியை -காதலித்து பார்


சிறு கரும் புள்ளி தெரிந்தால்
கவலைகளின் ரேகைகளை படர விடுவாய்
காலமே
உன்னை காவு கொண்டதுபோல் -காதலித்து பார்


விடிகாலை வரை
விரல் நுனியில் நடமிடும்
கணனியின் தட்டு தளம் கூட
தட்டு தடுமாறும் சூடாகி - காதலித்து பார்


தெருவோரம் நிக்கும்
சொறி நாயும் பார்க்காது
இருந்தும் ஊரே பார்ப்பது போல்
உள்ளுக்குள் தோன்றும் -காதலித்து பார்


சந்தேகங்களை குத்தகைக்கு எடுத்து
அவை உன் மனசை பேய்வீடாக்கும்
மணிக்கூண்டின் மணி எல்லாம்
மரண ஒலியாகும்அந்நேரம் -காதலித்து பார்


நிலவோடு பேசுவாய்
நீர் நிலையோடும் பேசுவாய்
கனவோடும் பேசுவாய்
காத்திருக்கும் உன் உறவுகளோடு மட்டும்
பேசாது போவாய் -காதலித்து பார்


மாதம் பிறந்து
முதல் பத்து நாள் சென்று
பின்வரும் ஈர் பத்து நாளும்
உன் மணிபர்சில் சனி இருக்கும் -காதலித்து பார்



பொட்டு வைப்பது மறக்கும்
பொருட்டாய் வேலை செய்வது மறக்கும்
பொறுமைக்கும் உனக்கும்
இடைவெளி அதிகமாகும் - காதலித்து பார்


கனவுகளின் ராஜ்யத்தில்
நீ மகாராணி ஆவாய்
நிஜங்களின் போராட்டத்தில்
வினா தாளாவாய்- காதலித்து பார்


காதல் தேசத்தில்
கனவுகள் மட்டுமே நிஜம்
அதில் நீ ராணியாகு -நிஜத்தில்
ஜாசகி ஆகும் வரை

வாழ்த்துக்கள் ..

No comments:

Post a Comment