Friday, March 8, 2013

நிலவுக்கும் குடை பிடிப்பேன்

http://muslimvillage.com/wp-content/uploads/2012/08/Muslim-Women-sad.jpg
ஏக்கங்களும் எண்ணங்களும்
தனிமைகளை சுகமாக
சுரண்டி தின்னுகின்றது
எட்டாத நிலவு
எரிகின்ற நெருப்பு
கை கொள்ளா கடல்
கை கூடா காதல்
அனைத்தையும்
கட்டி அணைக்க துடிக்கும்
எண்ண அதிர்வுகளுக்கு
வெறும் வண்ண கனவுகள்தான் மீதம் ...

கனவுகளை விதைத்து
கண்ணீரை அறுவடை செயும்
எண்ண அரக்கனை
எளிதில் கொன்றால்
வற்றாத ஜீவ நதியாகி
ஓடிகொண்டிருக்கும் உல்லாசமாய் உள்ளம் ...

உனக்காக ஒரு தாஜ்மஹாலை
உள்ளத்தில் மட்டுமே கட்ட முடிந்தது
உலகுக்கு கொடுத்த சாஜஹான் கூட
அதை நனையாது காக்க எந்த வழியும் செயவில்லை ...
உனக்காக நான் பிடிக்கும்
இந்த ஒற்றை கருங் குடையின் கீழ்
என் உலகமே உனக்காய்
விரிந்து பரந்து காத்திருகிறது
நிழல் கொடுக்க ..
என்று வருவாய் ...
உன் பிடிவாதங்களையும்
வீண் பிதற்றல்களையும்
வீணென்று தூக்கி வீசி ..?

நிலவுக்கும் குடை பிடிப்பேன்
நீ அங்கு இருப்பாய் என்றால்
உன் நினைக்கும் குடை பிடிப்பேன்
என் கனவுகளில் மழை நாள் என்றால்
கனவுகளில் நீந்தி
கலவரம் செய்யாது
என் கண்களில் நீந்த வா
காலம் எல்லாம்
உனக்கு நான் நிழல் கொடுப்பேன் ..

No comments:

Post a Comment