உடைந்துவிடக் கூடாது
என்பதில்
உறுதியாக இருக்கிறது மனது..
யாசகம்
அத்துனை இலகுவானதல்ல,
ப்ரியங்களை
பிச்சை கேட்டுவாழ்வதில்
பிரியமற்றவளாகவே இருக்கிறேன்..
யாருமற்ற இரவுகள்
பலஹீனமானவை..
அவை தேசம் கடந்து
பயணிக்க வல்லவை...
யாரோடு பேசவும்
ஆர்வமிருப்பதில்லை
யாருக்காகவும்
எதுவுமிருப்பதில்லை..
உன் கடைசி வார்த்தைகளை
எனதாக்கி
தினம் இரவுகளை நகர்த்துகிறேன்..
எனக்காக உன் இதயம்
துடிக்கின்ற வேளையில்
என் இதயம்
காடு நோக்கி
பயணப்பட்டிருக்கும்.
என்பதில்
உறுதியாக இருக்கிறது மனது..
யாசகம்
அத்துனை இலகுவானதல்ல,
ப்ரியங்களை
பிச்சை கேட்டுவாழ்வதில்
பிரியமற்றவளாகவே இருக்கிறேன்..
யாருமற்ற இரவுகள்
பலஹீனமானவை..
அவை தேசம் கடந்து
பயணிக்க வல்லவை...
யாரோடு பேசவும்
ஆர்வமிருப்பதில்லை
யாருக்காகவும்
எதுவுமிருப்பதில்லை..
உன் கடைசி வார்த்தைகளை
எனதாக்கி
தினம் இரவுகளை நகர்த்துகிறேன்..
எனக்காக உன் இதயம்
துடிக்கின்ற வேளையில்
என் இதயம்
காடு நோக்கி
பயணப்பட்டிருக்கும்.
No comments:
Post a Comment