Thursday, May 31, 2012

கடமை



வீட்டுகாவலாளிக்கோ
விடியும் வரை கடமை...
தோட்ட தொளிலாலிக்கோ
இருளும் வரை கடமை...
காவல் தொளிலாலிக்கோ
குறிப்பிட்ட நேரம் வரை கடமை...
அவரவர் கடமைக்கு
நேரம் குறித்த கடவுள்
காலையில்
கோலம் போடுவதில் ஆரம்பித்து
இரவு படுத்து தூங்கும்வரை ...
உன் குழந்தை
எழுந்து அழும் சத்தம் கேட்டு
உறங்காது போன உன் இரவுகளை-----


அம்மா உன் கடமைக்கு
பாசத்திற்கு வரையறை
குறிக்கவில்லையே ..

No comments:

Post a Comment