Thursday, May 31, 2012

வந்துவிடு...



ரம்

வாழ் நாள் கழிகிறது ..
என் வாழ்கையும் தொலைகிறது ..
உன்னோடு வாழ வழிதான் தெரியவில்லை
உன் நினைவுகளை மட்டும் சுமக்க
வாரமாவது வேண்டும் ..அனுமதி தந்துவிடு ..




கோபம்


எதையும் தாங்குவேன்
உன் கோபத்தை தவிர
ஏனென்றால் ...
என் உணர்வுகளை உறையச் செய்கிறதே
உன் கோபம் ...


உயிர்

ஒவொரு தடவையும்
உன்னை பிரிகையில்
வலி கொள்ளுது என் உயிர் நாடி ..
உன்னை பிரியாத வரம் வேண்டும்
வாய்ப்பளித்துவிடு ...


ஆனந்தம்


ஒவொரு தடவையிலும்
நீ சொல்லும் ஹாய் இல் மட்டுமே
உணர்கிறேன் ஆனந்தம் ...

No comments:

Post a Comment