Monday, June 18, 2012

மோட்சம் பெறும்


உன்னிடம் பேசிவிட துடிகின்றேன்
இருந்தும்
என் கண்ணீர் துளிகளே
என் மனதுள்ளே
நான் பூட்டி வைத்ததை
 காட்டி கொடுத்துவிடும்

என் கண்ணீர் கூட
என்னிடம்
இரக்கம் காட்ட மறுக்கிறது
உன்னைப்போல் ..
அதுவும் என்னை
உதாசீன படுத்துகின்றது ...

என் உப்பு துளிகளை
ஒரு முறை சுவைத்துவிடு
என் கண்ணீர் துளிகளும்
மோட்சம் பெறும்


 

No comments:

Post a Comment