Monday, June 18, 2012

ஏங்கும் நான் ..

எத்தனை கொஞ்சல்கள்
எத்தனை கெஞ்சல்கள்
எத்தனை மிஞ்சல்கள்
எத்தனை வலிகள்
எத்தனை சுமைகள்
எத்தனை கனவுகள்
அத்தனையும் நீ
நான் என்னை பற்றி
நினைப்பதை விட
என்னுள் இருக்கும்
உன்னை பற்றிதான்
அதிகமாக நினைத்துகொள்கிறேன்..

உனக்குள் நான் இருப்பேனா

எனக்காக நீ ஒரு துளி
ஒளித்தேனும் சிந்துவாயா ...?
உனக்குள்ளும் என் நினைவு
ஒளிர்ந்துகொண்டிருக்குமா ...

எத்தனை எதிர்பார்ப்பு

எவளவு தவிப்பு
எல்லாவற்றிலும் நீ
தொட முடியாத தொலைவு நீ
தொலைந்து போகும்
கனவு நீ
எங்கும் நீ
ஏங்கும்
நான் ..



No comments:

Post a Comment