Thursday, August 2, 2012

ஏன் கேட்கவில்லை ...

 


உன்னில் சாய்ந்து
உலகை மறக்க
ஆசை கொண்டேன் ..
தழுவிடும் உன் கரங்கள்
தரணியை மறக்க செய்ய
தாலாட்டும் அலை
தனிமையை இனிமையாக்க
தண்ணிலவின் குளிர்மை
தறிகெட்டு மனதை மயக்க
உன் அணைப்பில் உயிர் கரைய
ஒவோருகணமும்
ஏக்கத்தை சுமக்க ...
உயிரே ...................
என் உயிர் துடிக்கும் ஓசை
உனக்குமட்டும் ஏன் கேட்கவில்லை ...



No comments:

Post a Comment