Sunday, January 27, 2013

துணுக்கு

 

உன் நினைவுகளின் இருப்பு
உன் மீதான காதல்
நம் பிரிவு
நிமிடத்தில் எழுதியவை

வெறுமைகளின்
வறண்ட நிலத்தில்
சில பசுமை விதைகளாய்
உன் புன்னகை
தூறல்

என் கனவுத்தேரை
கடுகதியில் அழைத்து
இழுத்து செல்லும்
நினைவுகளே நீங்கள்
சில்லுகள்

விரைந்து கொண்டிருக்கும்
வாழ்க்கை வனத்தினுள்
வழிகாட்டியாக
அவ்வப்போது உன் வார்த்தைகள்
கொசுத் தூறல்

No comments:

Post a Comment