Saturday, April 20, 2013

தனிமை

 

இறுக பற்றி
இறுக்கி இழுக்கிறது
தடுக்கி விழுந்து எந்திரித்து பார்த்தபொழுது
என்னை சூழ யாருமில்லை
அது கோரத்தனமான முட்களால்
கீறி உடலெங்கும் உதிரம் உதிர்ந்துகொண்டிருந்தது .

ஒரு கை நீட்டி துளாவுகின்றேன்
உதவிக்கு ஒருவராவது வருவாரென்ற நம்பிக்கையில்
யாரும் தென்படவில்லை
அது  தன் வேலையை தொடர்ந்தது .

கீறிய வடு எங்கினும்
மரண வலியை  பிறப்பித்து சிரித்தது அது .
விடுதலைக்காக ஓர் வழியை தேடினேன்
எல்லா கதவுகளும் அடைபட்டு கிடக்கிறது .
அது தன் வேலையை தொடர்கிறது

அழுதேன்.. உரக்க அழமுடியாத சூழலில்
உதவி தேடி அழுதேன்
ஒருவரையும் காணோம்
என் உயிர் துடிப்பு ஒருவர் காதுக்கும் எட்டவில்லை
விம்மலில் முடிந்தது தேடல்
அது தன் கரம்கொண்டு குரல் வளையை நசித்து ..

சண்டை காரன் காலில் வீழ்வதே மேல்
சரணாகதி அடைந்தேன்
எனை ஆரத் தழுவியது
அது என்னை அரவணைத்து கொண்டது .

No comments:

Post a Comment