Monday, May 13, 2013

அம்மா

Photo: அம்மா 
********

ஆசை கட்டிலில்  பிறந்த
பாச தொட்டில்
உன் புன்னகை எனும்
நட்சத்திரங்களால் மினு மினுக்கும்
உன் அணைப்பு எனும்
போர்வையினால் கத கதகதக்கும்
உன் ஸ்பரிசம் எனும்
தீண்டலினால் கிளுகிளுக்கும் .
ஒவொரு உச்சி முகர்தலினால்
உயிர் பெற்று ஆடும் .

ஐயிரு திங்கள் சுமந்து
அமாவாசையை பெற்றெடுத்தாலும்
பல பவுர்ணமிகளின் ஜொலிப்பு
உன் பாச முகத்தில் தக தகக்கும் .
பெற்றது பேடாகினும்
என் பெண்ணென்று பெருமை கொள்ளும்
முதல் ஜீவன் நீ .

கற்றது கையளவு ஆகினும்
நீ பெற்றது பெரியதென்று போற்றும்
உன் உத்தம உள்ளம் கண்டு
உருகிடும் உள்ளம் நன்று .
சித்தனாய் , புத்தனாய்
எத்தனாய் வரினும்
பெத்தவள் நானென்று
பேசி மகிழும் உள்ளன்பு .

கோபங்கள் நீ பெறினும்
பசியென்று உரைக்கும் ஓர் கணத்தில்
பறந்திடும் உன் கோபம் முன்னில்
பல காலத்திற்கும் நான் குழந்தையே .
பாசமிகு அன்னையே
உன் பண்புகளில் ஒன்று கொடு
பார்புகழ வாழ்ந்துவிட . 


ஆசை கட்டிலில் பிறந்த
பாச தொட்டில்
உன் புன்னகை எனும்
நட்சத்திரங்களால் மினு மினுக்கும்
உன் அணைப்பு எனும்
போர்வையினால் கத கதகதக்கும்
உன் ஸ்பரிசம் எனும்
தீண்டலினால் கிளுகிளுக்கும் .
ஒவொரு உச்சி முகர்தலினால்
உயிர் பெற்று ஆடும் .

ஐயிரு திங்கள் சுமந்து
அமாவாசையை பெற்றெடுத்தாலும்
பல பவுர்ணமிகளின் ஜொலிப்பு
உன் பாச முகத்தில் தக தகக்கும் .
பெற்றது பேடாகினும்
என் பெண்ணென்று பெருமை கொள்ளும்
முதல் ஜீவன் நீ .

கற்றது கையளவு ஆகினும்
நீ பெற்றது பெரியதென்று போற்றும்
உன் உத்தம உள்ளம் கண்டு
உருகிடும் உள்ளம் நன்று .
சித்தனாய் , புத்தனாய்
எத்தனாய் வரினும்
பெத்தவள் நானென்று
பேசி மகிழும் உள்ளன்பு .

கோபங்கள் நீ பெறினும்
பசியென்று உரைக்கும் ஓர் கணத்தில்
பறந்திடும் உன் கோபம் முன்னில்
பல காலத்திற்கும் நான் குழந்தையே .
பாசமிகு அன்னையே
உன் பண்புகளில் ஒன்று கொடு
பார்புகழ வாழ்ந்துவிட .

No comments:

Post a Comment