Wednesday, October 16, 2013

கண்ணீர் இல்லாமல்



என் அனைத்திலும்
அடங்கிவிட்ட உன்னுள்
ஆத்மாவாகிவிட்ட என்
சுயங்களை
சுண்டி இழுக்கும்
நினைவுக் கரங்களின் பிடிகளில்
குழையும்
உன் ஸ்பரிச ரேகைகளின்
உஸ்னம்
உன் புன்னகை கீற்றுக்களால்
குளிர்ந்து விடுகிறது இப்பொழுதெல்லாம்

அடிக்கடி
என் உணர்வலைகளை
உருவகப் படுத்தி பார்க்கின்றேன்
அதில் உருவாகும் நீ
ஏனோ எனக்கு வலியை கொடுப்பதில்லை
மெலிதான உன் புன்னகையில்
மௌனித்துவிடும்
முணு முணுப்புகள்
முத்துக்களை பூக்க வைக்கிறது
முரட்டுத் தனமான
உதடுகளில் .

கடந்து சொல்லும் தென்றல்
ஏனோ கனல் அள்ளி தெளிப்பதில்லை
காதில் கலகலத்து சிரிக்கிறது
உன் சிரிப்புகளை
சிறிது களவாடி இருப்பதனால் ..

இரவினை உருக்கும்
வெள்ளி நிலவின்
ஒளிக்கீற்றும்
ஒன்றும் செய்வதில்லை
உன் முகம் கொண்டு
எனை பார்ப்பதனால் ...


ஒன்று மட்டும் சொல்லிவிட்டு செல்
உன் தேவை எனக்கு இல்லையா
இல்லை
உன்னைப் போல் ஒரு நிழல்
தீண்ட எனக்கு சம்மதமா ?
ஏனெனில்
உன் காந்தப் பார்வையை
தொலைத்த கணம் முதல்
நேற்றுவரை
கலங்கி தவித்த கண்கள்
இப்பொழுதெல்லாம்
முன்னைப்போல்
கண்ணீரைத் தருவதில்லை ..

6 comments:

  1. ரசித்தேன்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் நன்றிகள் .

      Delete
  2. இப்படியும் உணர்வுகள் உன்னில்தான் ஊறும் ரோஸ்

    அழகிய கவிதை
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    ReplyDelete