Monday, October 7, 2013

"தேவதைகள் மண்ணில் பிறகின்றனர்"




வான் பிளந்து
வர்ண வால் நிலவு
வடிவுகொண்டு
வந்து வாஞ்சை கொள்ளுதடி ..

சின்ன சின்ன குறும்புகள்
சிலிர்த்து பூக்கும்
புன்னகை பூக்களில்
தடுமாறி சிதறும் முத்துக்கள்
ஒவொன்றாக கோர்த்தெடுத்து
கொள்ளை கொண்ட மனதில்
கொலுவிருக்கும் உனக்கு
அலங்கரித்து மகிழ்கிறது மனது ...

இறக்கை இல்லாத தேவதை
என் இயல்போடு இணைந்திட்ட பூவை
வளைந்தாடும் சரிந்தாடும்
நுழைந்தாடும் வண்ண நிலவு

யார் சொன்னது
தேவதைகள் மண்ணில் பிறப்பதில்லைஎன்று
தேன்மதுர தமிழ் குழைந்து
தேன் ஒழுகும் வார்த்தைகளில்
நீ பேசும் வார்த்தைகள் அனைத்தும்
தேவ மொழியாம் தேவதையே .

No comments:

Post a Comment