Wednesday, October 1, 2014

மோகங்ககள் ....







இரவின் சுகந்தங்களை
தென்றல் புணர்ந்துகொண்டிருக்கும்
அழகிய இளவேனில் காலம் ..

அருகினில்
துயிலாமல்
புரளும் எனை அணைத்து
இரகசியமாய் கேட்கிறாய்
வேண்டுமா என்று ...?

இரவின் ஆரம்பத்தில்
என் இளமைகளை
தூண்டாமல் இருந்திருந்தால்
வேண்டாம் என சொல்லிடலாம் ..

அத்து மீறும்
பார்வை வட்டத்துள்
அங்கமெல்லாம்
கூசி சிலிர்த்த பொழுதே
அடங்காத ஆசைகளை
அறிந்திருந்தாய் நீ ..

உதட்டுக் கடிப்பிலும்
விம்மித் தணிந்த
மார்பிலும்
விழுந்து மீண்ட
பார்வைகளுக்கு தெரியாதா
விரக காற்று
தீயை மூட்டியது ....

ஒரு மோன நிலையிலும்
உன் மீதான மோகங்ககள்
முட்டி மோதியதை
முகர்ந்திருந்தும்
என்னடா கேள்வி இது ..

இரவில் நாங்கள்
வெட்கம் கெட்டவர்கள்தான்
விருப்பமானவனிடம் ..

No comments:

Post a Comment