Wednesday, October 1, 2014

பெண்மை ..




துகில் கலைந்த
நிலவொன்றின்
வெம்மையோடு
புரண்டு கொண்டிருக்கும்
மோக நிலாவென
கவி சொல்கிறாய் ..

ஓர் உந்துதலில்
உன் இதழ்களை
இதழ் அடைந்த கணத்தில்
இம்சை எனதானது ..
வலிய உன் மீசை முடிகள்
மெல்லிதழ் உராய்ந்த கணங்களில்
நீண்டு வழிகிறது மோகம் ..

மெல் ஆடை துளையும்
உன் கரங்களுக்குள்
சிக்கித் தவிக்கும்
பெண்மையின்
ஆழ்ந்த சுவாசங்களில்
ஆண்மையின் தேவை
அதிகரித்திருந்தது ..

ஓர் அணை உடைக்கும்
ஆர்ப்பரிப்புகாய்
ஒவொரு கணமும்
காத்திருக்கிறது
அதன் ரகசியங்கள்
துறந்த பெண்மை ..

1 comment: