Thursday, August 16, 2012

தொலைத்தேன் ...





உனக்காக அலைந்தேன்
என் கால்
ரேகை தான்
அழிந்தது ...
உன் இதயத்தில்
என் பாதச்சுவடு
பதியவே
இல்லை...

தேய்ந்தாலும்
வானை விட்டு நீங்காத
பிறை நிலவை போல
உதிர்ந்தாலும்
மலரை விட்டு நீங்காத
காம்பை போல...
மறைந்தாலும்
ஆகாயத்தை விட்டு நீங்காத
கதிரவனை போல...
வற்றினாலும்
நீரை விட்டு நீங்காத
ஈரத்தை போல...

நீ மறந்தாலும்
என் நெஞ்சை விட்டு
நீங்காது உன் நினைவுகள்...

உன்னை நான்
பார்த்த நாளிலிருந்து
என் இதயத்தை
தொலைத்தேன் ..

நீ என்னை
பார்த்த நாளிலிருந்து
என் தூக்கத்தை
தொலைத்தேன் ...

உன் மார்பை
தொட்டிலாக்கி
எனை தாலாட்டி
உறங்க வைப்பாயா....'?


என் ஆசைகள் எல்லாம்
கருவிலேயே
தொலைந்து போகின்றன..
உன்னை காதலித்த நாள்முதல் ....

உனக்காக கவிபாட பலர் இருந்தாலும்
இது எனக்காக நான் பாடும் கவிதை....

அடுத்த காதலர் தினத்தில்
உன்னுடன் நான் வாழ
வரம் கேட்கவில்லை
என் நினைவுகள் உன்னிடம் வாழ
இடம் கேட்கின்றேன்
உன் இதயத்தின் ஓர் ஓரத்தில்

No comments:

Post a Comment