Thursday, August 16, 2012

என் தவம்..

 
 
 
காதலால் இருவர்
கருத்தொருமித்து
வாழ்தலாம் திருமணம்
காதலால் இணையாது போனாலும்
காசால் இணையும்
பல பந்தம்
பலமற்ற பந்தம் ....


கால மாற்றத்தில்
காசும் மாறி
கனவுகளும் மாறி
காலத்துக்கும்
கவலையை தரும் பந்தம் தவிர்த்து
உன்னை காதலால்
கை பிடிக்க நினைத்தேன்
என் கண்ணாளனே...


தினம் பல கனவு
தித்திக்கும் கனவு
விடிந்ததும் திகட்டும் உலகு

பூ பந்தலிட்டு
புது மனைகள் தான் இட்டு
மணமகளாய் நானும்
என் மன நாஜகனாய்
என் மணாளனாய்
என்னருகில் நீ
உன்னருகில் நான்

காஞ்சி பட்டும்
கரை வேஷ்டியும்
ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ள
அவப்போது அசையும் கைகள்
அடிகடி பட்டுக்கொள்ள
முட்டிக் கொள்ளும் உணர்வுகள்
மூச்சை அதிகரிக்க ...
அவசரமாய் பரிமாரிகொள்ளும்
கடைக்கண் பார்வையில்
உன் கண் சிமிட்டலில்
வெட்கம் வேள்வியில் தகிக்கும் ...


மற்றாரும் உற்றாரும்
சுற்றமும் சூழ நின்று
மங்கள வாத்தியம் முழங்க
மங்கள நாண்...
நீ மகிழ்வுடன் சூட்டும் நேரம்
என் மனமெங்கும் நீ நிறைவாய் ..
என் மனதெல்லாம் பூ சொரிவாய் ..


ஏக்கங்களும் தாபங்களும்
இடை விடாத ஞாபகங்களும்
இடை விடாது பற்றி கொள்ள
வாழ்த்து கூறுபவரும்
வர்ணனை செய்பவரும்
கருத்தில் அல்ல
கண்ணில் கூட பதிய மாட்டார்கள் ...
புகை படம் பிடிபாதாய் கூறி
உன் தீண்டலில் என்னை
என் உணர்வை சிதைக்கும்
புகைப்பட பிடிப்பாளர்
உன்னிடம் புண்ணியம் கட்டிகொல்வார்

புரிந்தும் அறிந்தும்
புரியாமல் அறியாமல்
இருப்பதில் சுகம் ...
எதனை சுகம் ...
இணை பிரியாத துணைவியாய்
இன்ப மயக்கத்தில்
உன் இதய சுவர்கத்தில்
என்றுமே உன் ராணியாய்
உலாவரும் இனிய வரம் வேண்டும் ...


அம்மா பால் .....
எங்கயோ ஆழமாய்
ஒரு குரல் ஒழிக்க
மெதுவாய் தூக்கம் கலைகிறது
என் துயர் படிந்த
இன்ப கனவும் கலைகிறது ..

வாழ முடியாத வாழ்வை
கனவிலே வாழ்ந்த சுகத்துடன்
மீண்டும் கனவுகளுக்காய்
இரவினை நோக்கிய
என் தவம் தொடரும் ...

No comments:

Post a Comment