Sunday, November 11, 2012

என் பந்தம்

 


 உன்னோடான என் பந்தம்
தொலை வானும் கடலும்
உன் நினைவோடான என் பந்தம்
நிலமும் நிழலும் ...
விழித்திருக்கும் போதெல்லாம்
விரகத்தின் வழியில்
விரைவாக செல்லும்
 நினைவுக் குதிரை
ஏழ்கடல் தாண்டியும்
எம்பி குதித்து உரசி கொள்கிறது
கடந்து போன நம் காதல்
களிப்புகளின் சிதறல்களில் ...

எட்டி நடந்து
உன்னோடு சேர துடிக்கும்
பாதங்களுக்கு
நீ தடயமாக விட்டு செல்வது
என் மீதான
உதாசீனங்களும்
உதிரம் உறைய செய்யும்
உன் வெறுப்பு பார்வைகளையும்தான் ....

சேர்ந்து இருக்கும் பொழுதுகளில் எல்லாம்
உன் சீண்டல்களால்
சில்மிசங்களால்
வெக்கி சிவந்து
 துடிக்க தவறவில்லை என் இதயம் ..
இன்றோ விழியன் வரியில்
நீ எழுதி சென்ற
பிரியாவிடை கிறுக்கல்களில் ..
பிளந்து சிதறும் என் இதயம்
செந்நீர் துளிகளை
கண்ணீர் துளிகளாய் பிரசவிகின்றது ..

பிரசவங்களின் முடிவில்
மீந்து இருக்கும் களிப்பு இங்கில்லை
சவங்களின் சந்நிதியில்
சடுதியாய் குடிகொள்ளும்
சலனங்கள்தான் மீதம்
தவிக்கும் என் சலனங்களுக்கு
சயனமாய் வந்துவிடு

No comments:

Post a Comment