Sunday, November 11, 2012

சொல்லிவிடு

 

 விரக்தியின் விளிம்புகள்
விகாரமாய் விளையாடும்
மனகூண்டின் மையபகுதியில்
சூனியம் குடி கொண்டு
சுழல் காற்றாய் அடிக்கடி வீசும்

ஆழ்ந்துறங்கும் வேளையிலும்
அலாரங்கலாய் ஒலிக்கும்
உன் நினைவு கூவல்களுக்கு மத்தியில்
சேவல்களின்     அவசியம்
செயல் இழந்து தூங்கும்

உலர்ந்து போன உதடுகளும்
உன் நினைவுகளால்
உப்பி துடிக்கும் இதயமும்
சப்பி துப்பிய உன் துரோகங்களுக்கு
சடுதியாய் முக கண்ணடியாகின்றது..

தொடர்ந்து விட துடிக்கும்  உறவுக்கு
முற்றுப் புள்ளிகளை
நீ வைக்க முயன்றாலும் ..
என் முழுமைகளை திரட்டி
என் கையில் இருக்கும்
இந்த நாய் குட்டியாய்
உன்னை காண்கிறேன் ...

என் தழுவல்கள் இனி இதற்கு சொந்தம்
என் உணர்வுகள் இனி இதற்க்கு பந்தம் ..
என் தனிமைகள் இனி நமக்குள் இன்பம் ..
எங்கோ இருக்கும் உன்னை
நான் என் அருகில் பார்கிறேன் ..
இங்கே இருக்கும் எனை நீ
அங்கு எதுவாய் பார்ப்பாய் ?
உன் மனைவியில் ..?
உன் மகிழ்வில் பிறந்த குழந்தையில் ?
எதுவாய் பார்ப்பாய்
சொல்லிவிட்டு செல் ....
என் இதய நரம்பின் ஸ்ருதிகள்
இடம் மாறுவதற்கு முன் ...

No comments:

Post a Comment