Monday, October 7, 2013

" இடைவெளி "




உனக்கும் எனக்குமான
இந்த உறவின்
உருக் குலைந்த நிலையை
உருவாக்கியது இடைவெளி ..

தூரத்து மின்மினியாய்
அவ்வப்பொழுது
ஒளிரும் உன் பாச விளக்கு
போகத ஊருக்கு வழிகாட்டி ..

பல நேரங்களில்
இடைவெளிகள்தான்
தீர்மானிக்கிறது
இதயங்களின் இருப்பை
பிரிவுத் துயர் சுமந்து
பிரியமுடியா நினைவழைந்து
கருகும் காலத்தின் பிடியில்
உதிரும் ஓவிய சுவர்களாய்
இருப்புக்கள் நகரும்
இன்மையினை தேடி ...

சில சுயநலங்கள்
சிதிலம் அடைந்த
குருதி துகளின்
துர்நாற்றமென
தூர தேசம் வரை
வாடை சுமப்பதும்
இந்த இடை வெளிகளின்
இருப்பின் மீது
அவர்கள் கொண்ட
நம்பிக்கையின் பிடிப்பில்தான் ...

வலி சுமந்து வாழும்
பல இன உணர்வு சுமந்த
இதயங்களை
இந்த இடை வெளிகளும்
பிரிப்பதில்லை என்றும்
இறுதி வரை அவர் தம்
வேட்கையும் துறப்பதில்லை ..

அவ்வளவு ஏன்
இந்த நிமிஷம்
உனக்கும் எனக்குமான
இந்த உறவுத் தூரத்தின்
இடை வெளிகளை
நிரப்பி நிக்கும்
இந்த முகப் புத்தகத்தின்
பல முகங்கள்
குரோதம் , வஞ்சம்
அன்பு , காதல்
ஆசை , ஆளுமை
என அனைத்து முகம் கொண்டும்
நிரப்பி விடத் துடிக்கிறது இடைவெளியை ..
நிரம்பி விடுமா இடைவெளி
இல்லை நிரம்ப விடுவாயா இதயத்தில் நீ ...?

No comments:

Post a Comment