Monday, October 7, 2013

" தற்கொலை "



இயலாமை
தன் இறுதித் தேர்வுக்கு
ஆயத்தமாகிக்கொண்டு இருந்தது ..

ஏதோ ஒரு விடுதலையின்
வேட்கை கொண்டோ ..
ஒரு விடியலின் ஒளியை
புணர்ந்துவிடும் நோக்கிலோ
ஒரு இறுதிக்கான முடிவை நோக்கி
அது பயணிக்க துடிக்கிறது ...

அதன் இழப்புகளின்
வலிகளை அறிந்தும் அறியாமலும் ..
தான் நொடிப்பொழுது விடியலுக்காய்
தன் உறவுகளை உணர்வுகளை
தியாகம் செய்ய துடிக்கிறது ...

அனைவரது கண்ணிலும்
கருத்திலும் பேச்சிலும்
கோழைத்தனம் என கருதப்படும்
முயன்றால் தெரிந்துவிடும்
முயல்பவன் கோழையா
இல்லை முனகுபவன் கோழையா என்று ...

முயன்று முடியாதவன்
இனி முயலவே முயலாத
முனைவு இது ...
முயன்று பார்த்தவர் பலர்
முயலாமல் தோற்றவர பலர்
முடிந்து போனவர் பலரென
பட்டியல்கள் நீன்றாலும்
இதன் பயணங்கள் ஏனோ
ஆங்காங்கே முடுக்கி விடப்படுகின்றன ..

விடுதலைக்கு முயல்பவனே
விடுகதைக்கு விடைதேடு
விடியல் உன் கண்தெரியும் ..
திரும்பாத ஊர் செல்ல
விரும்பும் உன் செயலில்
வருந்தாத உளமுண்டோ ..
தற்கொலைக்கு போராடுபவனே
ஒரு முறை
தன்னம்பிக்கையோடு போராடு
வாழ்வு வசப்படும் ...

No comments:

Post a Comment