Wednesday, October 1, 2014

மனித நேயம் ...





வளர்ச்சியின் விளிம்பில்
தாகமெடுத்து
வறண்டு கிடக்கிறது

ரத்த வெள்ளத்தில்
புரண்டு கிடக்கும்
முகமறியா ஒருவரை
படம் பிடித்து
பரிதாப நிலைதகவல் போடும்
பருவத்தில் இருக்கிறது ..

பள்ளிக்கு சென்று
அகர லகரம்
கற்கும் பருவத்தில்
அடிகோடியில்
அடுக்களையில்
புரளும் நிலையில்
ஏக்கம் நிறைந்து
சிறுமியின்
தேடலில் நீள்கிறது ...

அடுத்தவர் வீடில்
எரியும் தீயில்
புகைப்பிடிக்கும்
அண்ணன் சொல்வதெல்லாம்
அடுத்தவர் பிரச்னை
நமக்கெதுக்கு ..
அவன் தீக்கங்கில்
தீய்ந்து கருகிறது ...

இன்றும்
விவாதப் பொருளாகி
கற்பனைகளில்
பேசப்பட்டு
கற்பழிக்கப் படுகிறது
பெண்களின் ஆடைகள்
அதில்
புண்பட்டு துவளும் மனது
புதிதாக தேடுகிறது ....

மனிதரே இல்லா சுழலில்
மனித நேயத்தை தேடி
எங்கனம் கரையேறுவது ?
இருந்தும்
ஒரு விடியலின் கரை தேடி
விவாதமாக
தொடர்கிறது
அன்றாடம்
தொலைக்காட்சியிலும்
மனித நேயம் ...

1 comment:

  1. விவாதத்தில் இன்னும்
    மனித நேயம்...

    ReplyDelete