Monday, June 18, 2012
ஏங்கும் நான் ..
எத்தனை கொஞ்சல்கள்
எத்தனை கெஞ்சல்கள்
எத்தனை மிஞ்சல்கள்
எத்தனை வலிகள்
எத்தனை சுமைகள்
எத்தனை கனவுகள்
அத்தனையும் நீ
நான் என்னை பற்றி
நினைப்பதை விட
என்னுள் இருக்கும்
உன்னை பற்றிதான்
அதிகமாக நினைத்துகொள்கிறேன்..
உனக்குள் நான் இருப்பேனா
எனக்காக நீ ஒரு துளி
ஒளித்தேனும் சிந்துவாயா ...?
உனக்குள்ளும் என் நினைவு
ஒளிர்ந்துகொண்டிருக்குமா ...
எத்தனை எதிர்பார்ப்பு
எவளவு தவிப்பு
எல்லாவற்றிலும் நீ
தொட முடியாத தொலைவு நீ
தொலைந்து போகும்
கனவு நீ
எங்கும் நீ
ஏங்கும் நான் ..
எத்தனை கெஞ்சல்கள்
எத்தனை மிஞ்சல்கள்
எத்தனை வலிகள்
எத்தனை சுமைகள்
எத்தனை கனவுகள்
அத்தனையும் நீ
நான் என்னை பற்றி
நினைப்பதை விட
என்னுள் இருக்கும்
உன்னை பற்றிதான்
அதிகமாக நினைத்துகொள்கிறேன்..
உனக்குள் நான் இருப்பேனா
எனக்காக நீ ஒரு துளி
ஒளித்தேனும் சிந்துவாயா ...?
உனக்குள்ளும் என் நினைவு
ஒளிர்ந்துகொண்டிருக்குமா ...
எத்தனை எதிர்பார்ப்பு
எவளவு தவிப்பு
எல்லாவற்றிலும் நீ
தொட முடியாத தொலைவு நீ
தொலைந்து போகும்
கனவு நீ
எங்கும் நீ
ஏங்கும் நான் ..
வாழ்வேன் ...
உன்னை விலகிட நினைக்கவில்லை
என்னை நீ விலத்திட நினைகின்றாய்
விலகிடும் உன்னை
என் அணுவும்
விலத்திட நினைக்காது ...
வா என்று அழைத்திட உரிமை இல்லை
அழைக்காது உன்னை சேர
என்னுடைமை இல்லை நீ ...
உன் வார்த்தைகளால்
குத்துபட்டு ....
குருதி கொப்பளித்தாலும்
உனக்காய் வாழ்வேன் ...
வாழ்வதற்காக அல்ல
வலிகளை சுமப்பதற்காக ...
என்னை நீ விலத்திட நினைகின்றாய்
விலகிடும் உன்னை
என் அணுவும்
விலத்திட நினைக்காது ...
வா என்று அழைத்திட உரிமை இல்லை
அழைக்காது உன்னை சேர
என்னுடைமை இல்லை நீ ...
உன் வார்த்தைகளால்
குத்துபட்டு ....
குருதி கொப்பளித்தாலும்
உனக்காய் வாழ்வேன் ...
வாழ்வதற்காக அல்ல
வலிகளை சுமப்பதற்காக ...
Sunday, June 17, 2012
உன்னை எண்ணி
நீல வானும்
நீளும் கடலும்
நாளும் நம் வாழ்வில்
நவின்றது பலகோடி ...
உன்னோடு நான்
என்னோடு நீ
ஏகாந்த இரவு
எரிகின்ற உணர்வு ...
உன்னோடு சேர்ந்த
என்னோடான தனிமைகள்
நீள்கின்ற வரம் வேண்டும்
கண்ணோடு கண்கலந்து
கருத்தோடு நீ கலந்து
காதோடு கதை பேசி
கலந்திடும் இரவு வேண்டும்
அணைத்திடும் பொழுதினில்
அலைகின்ற உணர்வுக்கு
ஆர்த்மாத்தமான - உன்
அழுத்தங்கள் வேண்டும் ...
உன்னோடு நானும்
உறவாடும் பொழுதில்
பார் பார்க்கும் மதியவனும்
நம்மை முகில் எனும் கூட்டுக்குள்
பதுங்கித்தான் பார்ப்பானோ ....
அன்றில்
பாராளும் உன் கைகள்
பாவை இவளை ஆளுவது கண்டு
பார்வையிலே வெட்கம் சூழ
போர்வை என முகிலெடுத்து மறைத்தானோ ...
வெண்ணிலவின் ஒளி எடுத்து
வீசுகின்ற தென்றல் தனை பிடித்து
ஓடுகின்ற நீர் கரையில்
ஓவியமாய் எனை நிறுத்தி
காவியம் அதை நீ தீட்ட
காரணமாய் கொண்டாயோ ...
பாவை இவள் மனசிறையில்
பதிந்து விட்ட ஓவியம் நீ
பாதியிலே போனாலும்
பார்த்திருப்பேன் உன்னை எண்ணி
நீளும் கடலும்
நாளும் நம் வாழ்வில்
நவின்றது பலகோடி ...
உன்னோடு நான்
என்னோடு நீ
ஏகாந்த இரவு
எரிகின்ற உணர்வு ...
உன்னோடு சேர்ந்த
என்னோடான தனிமைகள்
நீள்கின்ற வரம் வேண்டும்
கண்ணோடு கண்கலந்து
கருத்தோடு நீ கலந்து
காதோடு கதை பேசி
கலந்திடும் இரவு வேண்டும்
அணைத்திடும் பொழுதினில்
அலைகின்ற உணர்வுக்கு
ஆர்த்மாத்தமான - உன்
அழுத்தங்கள் வேண்டும் ...
உன்னோடு நானும்
உறவாடும் பொழுதில்
பார் பார்க்கும் மதியவனும்
நம்மை முகில் எனும் கூட்டுக்குள்
பதுங்கித்தான் பார்ப்பானோ ....
அன்றில்
பாராளும் உன் கைகள்
பாவை இவளை ஆளுவது கண்டு
பார்வையிலே வெட்கம் சூழ
போர்வை என முகிலெடுத்து மறைத்தானோ ...
வெண்ணிலவின் ஒளி எடுத்து
வீசுகின்ற தென்றல் தனை பிடித்து
ஓடுகின்ற நீர் கரையில்
ஓவியமாய் எனை நிறுத்தி
காவியம் அதை நீ தீட்ட
காரணமாய் கொண்டாயோ ...
பாவை இவள் மனசிறையில்
பதிந்து விட்ட ஓவியம் நீ
பாதியிலே போனாலும்
பார்த்திருப்பேன் உன்னை எண்ணி
Saturday, June 16, 2012
ஏங்குகின்றேன்
உன் நினைவுகளை கோர்த்து
என் இதயம் எனும் வீணையில்
எப்பொழுதும் முப்பொழுதும்
உன் நினைவுகளை சுமந்து
இசைக்கும் குயில் இவள் ...
என் உணர்வெனும்
இதய கம்பிகளை அறுத்து
இசைக்காமல் போட்டாயோ அன்பே ...
என்னை திட்டியாவது பேசணும் என்கிறாய் நீ
இமை தட்டியாவது உன்னை காண
ஏங்குகின்றேன் நான் ....
உனை சுவாசிக்கின்றேன்
உன்னை நேசிக்கின்றேன்
உன்னில் வசிக்கின்றேன்
உன்னையே யோசிக்கின்றேன் ...
உன் அன்பையே யாசிகின்றேன் ....
என்னை திட்டுவதில் உனக்கின்பம் ..
தடுக்கவில்லை நான்
தடுமாறாமல் திட்டு
திட்டிகொண்டவது
என்னுடன் நீ பேசினால் போதும் ...
தடுமாறும் உணர்வுகளும்
தடம் மாறும் நினைவுகளும்
தடங்கலுக்கு வருந்துகின்றதாம் ...
நீ இல்லாத பொழுதுகளில்
இவள் நினைவு மரத்த வேளைகளில் ...
Friday, June 15, 2012
உணர்வுகளால்....
உனக்கான தவம்....
ஒவொரு கணமும்
இசையுடன்தான் என் பயணம்
என் கனவுகளுக்கு
என் நினைவுகளுக்கும்
என் உணர்வுகளுக்கும்
ஒரே வடிகால் இசைதான் ...
உன் வாசத்தை சுவாசிக்கும்
என் நாசி ...
உன் நினைவுகளை
இசை கொண்டு மீட்டுகின்றது ...
உன் மீது நான் கொண்ட காதல்
உனக்கு பொய்யாக தெரியலாம் ...
உனக்கான என் தவம்
உபயோகமற்று போகலாம்
என் உள்ளத்து தவம் யாவும்
உனக்கான தேடலாக
இசைகிறேன் தனிமையில் ...
உனக்கு பிடித்த தனிமை
எனக்கும் பிடிக்குது ...
நீ இல்லாத தனிமைகளை
தனிமையிலேயே கழிக்கிறேன்
இசையிலே மிதகின்றேன் ....
ஒவொரு தடவையும்
உன்னால் அறுக்கபட்ட தந்திகள்
ஒவொன்றாக இணைத்து
உனக்கான நினைவுகளை
உணர்வுகளால் இசைகின்றேன் ...
வா வந்துவிடு ....
வாசம் மறந்த எனக்கு
நேசம் கொடு ...
என் நினைவுகளை உன்னுடன் கலந்துவிடு
ஒவொரு கணமும்
இசையுடன்தான் என் பயணம்
என் கனவுகளுக்கு
என் நினைவுகளுக்கும்
என் உணர்வுகளுக்கும்
ஒரே வடிகால் இசைதான் ...
உன் வாசத்தை சுவாசிக்கும்
என் நாசி ...
உன் நினைவுகளை
இசை கொண்டு மீட்டுகின்றது ...
உன் மீது நான் கொண்ட காதல்
உனக்கு பொய்யாக தெரியலாம் ...
உனக்கான என் தவம்
உபயோகமற்று போகலாம்
என் உள்ளத்து தவம் யாவும்
உனக்கான தேடலாக
இசைகிறேன் தனிமையில் ...
உனக்கு பிடித்த தனிமை
எனக்கும் பிடிக்குது ...
நீ இல்லாத தனிமைகளை
தனிமையிலேயே கழிக்கிறேன்
இசையிலே மிதகின்றேன் ....
ஒவொரு தடவையும்
உன்னால் அறுக்கபட்ட தந்திகள்
ஒவொன்றாக இணைத்து
உனக்கான நினைவுகளை
உணர்வுகளால் இசைகின்றேன் ...
வா வந்துவிடு ....
வாசம் மறந்த எனக்கு
நேசம் கொடு ...
என் நினைவுகளை உன்னுடன் கலந்துவிடு
..
Sunday, June 3, 2012
Saturday, June 2, 2012
உடனே அரவணை ...
ஏன்.... ?
என் ஏக்கங்கள் புரியவில்லையா ...?
என் தேக்கங்கள் தெரியவில்லையா ...
எதற்காக இப்படி ...
சல்லடையாக கிழித்த பின்பும்
என் சலனங்கள்
உன்னை சுற்றியே
உலா வருகின்றது ...
கர்த்தரை சிலுவையில் அறைந்தார்கள் வரலாறு
என்னை நீ எதற்காக அறைகிறாய்
உன் வாழ்க்கை வரலாற்றில்
என்னை அடிகடி நினைத்து கொள்ளவா ..?
என்னை கொல்கிறாய்...?
உன் வார்த்தைகளால்
என் இதயம் கிளிக்கபட்டும்
என் வதனம் விசனப்பட்ட போதும்
உன் மேல் சலனப்பட
தயங்கவில்லை
என் வேட்டகம் கெட்ட இதயம் ...
வா வந்து விடு
உன்னால் ஆனதை
உடனே அரவணை ...
Friday, June 1, 2012
வா வந்துவிடு ....
உலகுக்கெல்லாம் இருள்
என் உணர்வுகளுக்குமட்டும் வெளிச்சம்
உல்லாசமாய் ஊரைசுற்றிய பறவை
உன்னால் உன் நினைவுகளால்
சிறைப்பிடிக்கப்பட்டு ...
சித்திரவதைப்படுகின்றேன் ....
உன் நினைவுகளை சுமக்கும் என் இதயம்
எனக்கு கட்டுபட்டாலும்
உன் நிகழ்வினை சுகிக்கும் கண்கள்
உன்னை உன் ஸ்பரிசத்தை
உறவாட கேட்கின்றன ....
எத்தனை நாள்
கனவிலே கூட ...?
காதல் களிப்பிலே தேட .. ?
வா வந்துவிடு ....
உன் உதடுகளால்
என் உயிர்வரை வாங்கு ...
உன் உரிமைகளை
எடுத்திடு இங்கு ....
Subscribe to:
Comments (Atom)































