Thursday, October 5, 2017

இந்த இரவு ...

என்புருக்கும்
மார்கழி குளிரில்
சூடான போர்வையாக
என்னை போர்த்திருக்கிறாய் ..
...
உன் சுவாசங்கள்
மேனி படர்ந்து
மெல்ல தூண்டுகிறது
உன் மீதான மோகங்களை..

உடல் சரிந்து
ஆடையற்ற
உன் தோள்வளைவில்
அழுந்திய உதடுகளில்
கரிக்கும்
உப்புச்சுவையில்
வயகரா தோற்றுக்கொண்டிருந்தது ..

கலைந்து கிடக்கும்
உன் முடி அழைந்து
உச்சியில்
பகிர்ந்த முத்தத்தில்
என் தேவை
உன்னை யாசித்திருந்தது ...

சட் டென
இறுக்கிய உன் அணைப்பில்
தெரிந்திருந்தது
எனக்குள்
நீ இறங்க ஆரம்பிக்கிறாய் ..

உறக்கம் தொலைத்திருக்கிறது
இந்த இரவு
என் தேவை
இவை இரண்டும் ...

No comments:

Post a Comment