Thursday, October 5, 2017

இருள்

இருள் குவிந்த
மாலைப்பொழுதில்
குமிழ் கசிந்த
மெல் ஒளியில்
ஓர்
...
உருகும் மெழுகென நான்
உருக்கும் நெருப்பென நீ ..

சில கற்ப்பனைகள்
களைந்து
உன் கைகள் நீவி
ஸ்பரிசம் நுகர்ந்து விட
துடிக்கும் விரல் நகர்வுகள்

ஆத்மார்த்தமான
பார்வை ஆலாபனைகள்
கடந்து
நீண்டு கிடக்கிறது
கைகளின் ஸ்பரிசம்

காலம் கடந்து
காவல் கிடந்தனவோ
பிரிய மறந்து
ப்ரியமாக ...

குறை கிடக்கும்
மத்துக் கிண்ணங்கள்
நிறைந்து வழிகிறது
நீ நான் நிலவு
நீளும் இருள் என .....

No comments:

Post a Comment