Thursday, October 5, 2017

கோபம்

உன்
முத்தங்களுக்கு மட்டுமே
தெரிகிறது
என்
கோபப் போர்வை
...
களைந்தெறிய ..

கோபம் களைந்த
கணப்பொழுதில்
மோகம்
அழைந்துவிடுகிறது -என்னை

உன் தூக்கத்துக்கு
ஏன் எதுவும் புரிவதில்லை
இவள் ஏக்கங்கள்
தூக்கம் கலைந்த
உன் உதடுகளின் ஸ்பரிசம்
இன்றுவரை இருந்ததில்லை ..

சில நடுநிஷி சுமந்த
மணித்துளிகளை
கடந்து காத்திருக்கிறேன்
உலர்ந்து தடித்த
உன் உதடுகளின்
உஷ்ண உரசலுக்காய் ...

No comments:

Post a Comment