Thursday, October 5, 2017

உயிர் தடவு

உன்
நினைவுகளுக்கும்
எனக்குமான
பரீட்சார்த்தங்கள்
எப்பொழுதும்போல்...
...

எனை
கடந்து செல்லும்
தென்றலிடம்
தூதனுப்புகிறாய்
..

அது
எனை
சுடுவதை விடவா
உன் நினைவுகள்
சுட்டுவிடும்
சொல்லு ...

புன்னகைத்து சென்றுவிடுகிறாய்
புதைந்துவிடும்
மனதுக்குள்
முளைத்து விடுகிறது
உன் மீதான
விரகங்களுக்கான
முதல் வேர் ...

தூக்கம் தொலைத்த
உன் சிணுங்கிய முகத்தில்
மினு மினுக்கிறது
உன் மீதான
மோக அணுக்கள் ..

வா
வதை செய்
விரகத்தின் விளிம்பில்
வழியத் தழும்பும்
தேனுண்டு திகட்டி எழு ..

ஊண் உண்டு
உயிர் தடவு
கூச்செறியும் முடி முனைகள்
தம் கூச்சம் களைந்து
கலந்து பிறக்கட்டும்
ஓர் கலவி ..

No comments:

Post a Comment