Thursday, October 5, 2017

இரவோடு ஓர் விண்ணப்பம்

ஒதுக்க முடியா இரவினை
ஒருக்களித்து
சென்று விட முனைகிறேன் ...

இந்த இரவு
...
ஏன்
இதனை நீட்சி உள்ளதாய்...

யார் யாரோ இருந்தும்
யாருமற்றவாளாய்
ஏதோதோ இருந்தும்
ஏதிலியாய்
வாழ்விருந்தும்
வசந்தம் தொலைத்தவளாய் ...

வண்ணங்கள் குழைத்து
அப்பிய விம்பங்கள்
ஏதும் செப்பிட முடியாமால்
தத்து பித்தென
எண்ணச் சிதைவுகளாய் ..

இரவோடு ஓர் விண்ணப்பம்
நீ விடியாது தொலைந்து விடேன்

No comments:

Post a Comment