Thursday, October 5, 2017

பசி தீரட்டும்

மழைக்கால நினைவுகளில்
சிலிர்க்கும்
நனைந்த பூவென
ஒரு சூடான தென்றலுக்கான
தவமிருப்பு ....
...

உலர்ந்த
உன் மீசை முடியின்
நகர்வுகளால்
முறுக்கேறும்
முனைகளுக்குள்
உன் முத்த ஒற்றுதலுக்கான
முனைவுப் போராட்டம் ...

புன்னகை புதைந்த
உன் மோகப் பார்வைக்குள்
முடிகள்
தீப் பற்றிக் கொல்கிறது ..

உதடு தொடா
உன் உரசல்களில்
உன்மத்தம் கொண்ட மனது
உளறிச் சாய்கிறது
மார்போடு ...

கண் திறக்கும் முன்
என் கன்னிமையை புசித்துவிடு
என் பசி தீரட்டும்
காமம்
இளைப்பாறட்டும் ...

No comments:

Post a Comment