Monday, May 28, 2012

உப்பு துளிகளும்




என் வானமே கருக்கொள்கிறது
வற்றாத நதியாய்
வரையறை இல்ல என் அன்பு
வசப்படாமல் போனதால்
என் விழிகளும்
வற்றாத வைகை ஆனதோ .....


என்னை சூழ பல இதயம்
இருந்தும் இல்லை எனகோர் உதயம்
காதலுக்கு மட்டுமல்ல
நல்ல நட்புக்கும் ராசி வேண்டும்
நல்லதே நினைத்தேன்
நான் மட்டும்
நயவஞ்சகம் ஏன் உனக்கு
ஆனந்த கண்ணீர் யாவும்
இன்று அணை கடந்த வெள்ளமாகி
ஆறு கடல் தாண்டிடுமோ ..
எள்ளி நகையாட நட்பென்று நீ எதற்கு
எதுமே இல்லமால்
பெயருக்கு ஓர் காதல் உறவு எதற்கு


என் இதயத்திற்கு வலிக்குமென்று
அவன் துயில என் ரணங்களை சுகமாக்கி
வெண் பஞ்சு மேகம் அனுப்பினேன்
என் நட்புக்கு தோள்கொடுக்க
நானும் ஒருத்தியாய்
என் தோழமை துயில
நட்பு கரம் கொடுத்து
வெண் மேகத்தை படுக்கை விரித்தேன் ...


வாங்கி வந்த வரமா
இல்லை .வந்ததால் வந்த சாபமா
நல்ல நட்பும் இல்லை
நான் நாடும் இதயமும் இல்லை
எட்ட நின்றே
என் வெண் மேக துகள்களை
கரு மேகமாக்கி
என் கண் வழியே
கர் இருளை திரட்டி
கண்ணீரை கரை புரள செய்கின்றது...

வானமே கண்களாக
வாங்கி வந்த சாபங்கள்
கண்ணீர் துளிகளாக
என் வானமும் காரைகிறது
என் கண்ணீர் துகளில்..
கண்ணீர் துளிகள் சேர்ந்து
கடலையே உருவாகினாலும்


கண நேரம் நனைந்து விடு
என் உப்பு துளிகளும்
உவப்பை உணர்த்திவிடும் .. ..
 
 
 
 

No comments:

Post a Comment