Monday, May 28, 2012

என் தந்தை...




நல் உரைகள் கூறி
நல் வழியில் என்னை
நல் வழி நடத்திய
என் மரியாதைக்குரிய
மகத்தான ஓர் மனிதன்
என் தந்தை

வாழும் காலத்தில்
வாழ்ந்தால் இப்படிதான்
வாழவேண்டும் என்று
எடுத்துகாட்டாய்
வாழ்ந்து காட்டும்
ஆடவன் என் தந்தை

தளிர் நடை பயின்று
தடுமாறி விழுந்த போதும்
தன்னிலை இலாது
தாறு மாறாய் ஓடிய போதும்
தன் கரம் தந்து வழி நடத்தியதும்
வழி காடியதும் என் தந்தையின் கரங்களே ...

வாகையின் பாடங்களை
பல தடவைகளில்
ஆசானாகவும்
அன்பான சொதரனாயும்
அருமையனா நண்பனாவும்
அருகமர்ந்து அன்பாக பயிற்ருவிதது
என் தந்தையின் கரங்களே ...

ஆனா முதல்
அறுதிவரை
அன்போடு கற்றுத்தந்த என் தந்தையே
அடுத்த பிறவிகளிலும்
எனக்கே தந்தையாய் வேண்டும் ...

அன்பாக ஆசையாக
உங்கள் கரம் பற்றி
நடை பயிலும்
அந்த ஐந்து வயது
மீண்டும் வேண்டும் எனக்கு ..
 
 

No comments:

Post a Comment