Monday, May 28, 2012

சிதைந்து போனது...



அன்பே ...

அணைத்திட துடிக்கும் என் கரைங்களை விட
உன்னை அழைத்திட துடிக்கும் இதழ்களை விட
உன் ஸ்பரிசத்தை உணரும் உடலை விட
உன்னை காண துடித்த என் கண்களுக்கு
காரணமின்றி ஏன் தண்டனை கொடுக்கின்றாய் ...

உன்னால் உன் நினைவுகளால்
சிதைந்து போனது என் இதயம் ...
கண்களின் வழியே இதயத்தை காணலாமாம்
என் கண்களில் வடியும் என் உதிரம்
உன்னால் உன் நினைவுகளால்
அணு அணுவாக சிதைந்து கொண்டிருக்கும்
என் இதயத்தை காட்டுகிறதா ....?

உன் நினைவுகளை மலர் கொண்டு
தினவேட்டில் தீட்டினேன்...
என் வேதனைகளை சுமந்து
அதுவும் எனக்காக தன்நீரை
சென்நீராக சிந்துகின்றது
நீமட்டும் என்னை உணராது போனதேனோ ..


என் மனதை திருடிய நீயே
என் மரணத்திற்கும் மாலை இடுவாயோ ..
ஒரு முறையாவது
உன் காதலை நான் ஸ்பரிசிக்கும்
வரம் ஒன்று தந்துவிடு
மனதோடு வாழ்ந்துவிட்டு போவேன் .


No comments:

Post a Comment