Monday, May 28, 2012

அமாவாசைகள் ...




உனக்காக என் காத்திருப்பு
தெரிந்தும் மறைந்தும்
மறைத்தும் உன் பார்வைகள் எதற்கு ...
ஒளிந்திருந்து ஒருக்களித்து
உன் பார்வைகளை வீசாதே
உன்னை நான் அறிவேன்
என்னை நீயும் அறிவாய் ...


தினம் தினம்
உனக்காக மட்டும்
என் தனிமைகள் தவங்களில் கரைய
உன் வரவுக்காக
உருகியபடி நான் ...
உன் வரவினில்
என் வாழ்கையை தொலைக்க
உள்ளன்போடு உனக்காக
என் காத்திருப்புக்கள்


உன் மனதை திறந்து
இருள் விலககி
உன் இதய அறையில்
என்று எனை கொலு வைப்பாய்
அன்று முதல் நாள் எல்லாம் பௌர்ணமிதான்
அது வரை பவுர்ணமிகளும்
அமாவாசைகள் தான் .....



No comments:

Post a Comment