Sunday, September 7, 2014

நம்பிக்கை..



இந்த நிலாகலத்தின்
நீட்சியில்
உன் நினைவுகளை
படர விட்டிருக்கிறாய்

தொலைவில்
தொட்டுவிடலாம்
நம்பிக்கையில் நடை போட்ட
சின்னம் சிறு குழந்தையாக
உன்னை நேசித்த நாட்கள் ...

அந்த நிலவைப் போல நீ
உன்னை தொடரும்
குழந்தை போல நான் ..

நடு ராத்திரிகளின்
நிஷப்த பயங்களோடு
உன் இன்மையின்
வெறுமையின் பயணங்கள் ..

ஒரு விலகுதலில்
விளித்து மிரள்கிறது மனம்
நிமிட நகர்வுகளின்
மணித்துளிகளை
விழுங்கிச் சிரிக்கிறாய்
விரக்திகளை
பரிசளித்துவிட்டு ..

தொட முடியாத
தொலைவில் உள்ள உன்னிடம்
சிறு குழந்தையாகவே
ஆசை கொள்கிறேன்
நீ
அடைய முடியாத
ஆவல் என்பது
அறியாமலே போயிருக்க கூடாதா?

No comments:

Post a Comment