Sunday, September 7, 2014

விடியலை தாருங்கள்..

 
 
ஒரு புத்தன் போதித்த
பல எத்தன் சேர்ந்து
பல வித்தை மாய்த்த
கொடிய நாளிது

குண்டு சத்தங்கள் கேட்டு
குலை உயிர் துடித்து
குறை உயிராய் கிடந்தவர்மேல்
குறி வெறிகொண்டு
குதறி பின் மாய்த்த
குலம் சிதைந்த நாளின்று ..

ஏழுவயது சிறுவனும் புலி
எழுவது வயது கிழவனும் புலி
இனி எங்கு எது பிறப்பினும்
அதுவெல்லாம் புலியென்று
வெளிவரமுன்பே
வெறிகொண்டு
தொப்புள்கொடி அறுத்த நாளின்று ...

மன்னுயிரும் தேடுதடா
மறவர் குலம் விதைந்த தேசமெங்கும்
மறுபடி முளைகளை ...
மாறி நின்று பேசுவோரே
மனதை ஒரு கணம் திருப்புங்கள்
ஓய்ந்தொழிந்து போனது
யாரோ அல்ல யாம்தான் .

இன்று நன்றாய் இருப்பதாய்
பேசும் நாக்கில் உப்புசுவை தெரியோரே
நாளை உம் பாவாடை நாடா
அவிழ்க்கப் படும்பொழுது தெரியும்
இன்றய உமது நன்றுகள்
தின்பது எதுவென்று ..

மனம் கனதி கூடி தவிக்குது
இனம் களவாடப் பட்ட நாளிதனில்
மாண்டவர்கள் மீள்வதில்லை
மனதில் வாழ்பவர்கள் சாவதில்லை ..
உலக மறைகள் பேசும் பெரியோரே
எங்கள் மனங்கள் அமைதிகொள்ள
மார்க்கம் ஒன்று சொல்லுங்கள் ..
மரணம் போர்த்த போர்வைகளைய
ஒரு மாறா விடியலை தாருங்கள்..

No comments:

Post a Comment