Sunday, September 7, 2014

" கனவு வேட்டை ..."



ஒரு மெல்லிய
தாள் உடைத்து
வரைய முனைந்துகொண்டிருந்தது
பேனா முனை ..

நிஜவுலகின்
நிழல் உடைத்து
கண்ணியம் கரை உடைத்து
காமம் காற்று வேகத்தில்
தாள் திறந்து புகுந்து கொள்கிறது

புருவம் நீவும் விரல்கள்
புதிதாய் எதையோ தேட
பருவம் தாண்டி
வளர்ந்த
மொடுக்கள் அனைத்தும்
மூர்ச்சை கொள்ள
விரசம் தேடி
விரல்கள் நகர்கிறது
விருப்பு வாக்குகளோடு ..

ஒரு நடிகையின் நளினம்
அவன் நங்கையின் உடலில்
உஷ்ண மூச்சுக்காற்றில்
உடல் உருகி
வேறு உருவம் படைத்து
உடைத்து மீள்கிறது
பெரு மூச்சுகளென ..

எதிலும் சேராச்சுவை
என்பெங்கும்
அம்பெனப் பாய
ஆறாகி நூறாகி
வேராகி வேறாகி
விருந்துண்டு மீள்கிறது..

இரவுகளின் போர்வையில்
கனவுகளில்
போர்வைகள் அற்று
உறங்கிக்கொண்டிருப்பது
காதலர் வேட்டைகள் மட்டுமல்ல
பல்ல கண்ணியவான்களின்
சேட்டைகளும் தான் .

No comments:

Post a Comment