Sunday, September 7, 2014

ஜனனம் ...




ஒரு இலைதளிர் காலத்தின்
வைர இலைகளின் மீது
துளிர்த்து மினு மினுக்கிறது
சில மழைத்துளிகளின்
ஜனனம் ...

மகரந்த சேர்க்கைகளின்
மகத்தான சேர்வையில்
மெதுவாக துளிர்த்த
மொட்டுகளில்
மலரின் ஜனனம் ஒன்று
மறு பிறப்புக்காய்
மனு போட்ட வண்ணம் ...

பலநாள் எத்தணிப்பில்
நிறை கற்பனைகள் தின்று
கடைசியாய் கருக்கொண்ட
முதல் கவிதையின்
பிறப்பொன்று...

நீர்காணா நிலமொன்று
துளி நீர் அருந்தி
நிலம் வெடித்து
நீள் தலை தள்ள
விளையும்
முளை ஒன்றின்
முதல் ஜனனம் ...

காதலர் இருவர்
கருத்தொருமித்து
கலவி துளைந்து
கருக்கொண்ட பெண்மை
தாய்மைக்காய் தவம் கொள்ளும்
சிசுக் கொள்ளும்
உயிர் ஜனனம் ...

உயர்வானது ஜனனம்
உனக்கல்ல எனக்கல்ல
மனம் கொள்ளும் அனைத்திலும்
மகிழ்வானது கொள்ளும்
எவ்வுயிர்க்கும்
மரணம் ஈயும் ஜனனம்
மகத்தானது ...

No comments:

Post a Comment