Sunday, September 7, 2014

நினைவுகளில் ...


 
 
அவன் உணர்வுகளில்
உறங்கிக்கொண்டு இருக்கிறாள்
அவள் மலராக ..

அதிகாலைகளில்
அலரும் நித்யகல்யாணி என
மதியமும் மிளிரும்
செம்பருத்திஎன
மாலையில் மலரும்
மணி மலரென
இரவுகளில்
மணம் கமழும் மல்லிகைஎன
உணர்வுகளில்
உயிரை சேர்க்கிறாள்
இதமாக ...

ஒரு தாமரையின்
மலர்சியென
மகிழ்ந்தாடும் அவள்
முகமலர்வில்
அலர்ந்து விசிக்கிறது
அவன் இதயக்கமலம் .
அடிக்கடி சொற்களால்
வதைக்கும் அவள்
நினைவு படுத்துகிறாள்
முள்ளில் அழகிய ரோஜாக்களை ..

கண்களில் மலர்ந்த
கார்த்திகை பூக்களில்
கணப்பொழுதில் தொலைத்துவிட்ட
காளை மனதில்
இன்னும்
அதிசய மலர்களின்
மாலையாகவே
தினம் அவனை சூடிக்கொள்கிறாள்
நினைவுகளில் ...

No comments:

Post a Comment