Sunday, September 7, 2014

"மயக்கும் நீ "



உன்னோடான
என் பொழுதுகளெல்லாம்
வண்ணம் தெளித்து
வரையப்படுகிறது
ஒரு பட்டாம் பூச்சியின்
இறகுகள் கொண்டு ..

அவ்வப்பொழுது
கேள்விகளாய்
உயரும் புருவ வளைவில்
வளைந்து குளைகிறது
வாகாய் மனது ...

ஒரு மென்புன்னகையில்
உலகின்
மாயங்கள் அனைத்தும்
மயங்கிக் கிடப்பதாய் எண்ணம்

விலகமுடியாத
நிமிடங்கள் கொண்டு
புனையப் படுகிறது
நமக்கான
எதிர்காலம் ..

அவ்வபொழுது
பாய்ந்து மீளும்
பார்வையின் வீச்சில்
வெக்கம் துகில் உரிந்து
பக்கம் வீழ்ந்துகிடக்கிறது
ஏக்கம் எதுவரையோ
அதுவரை நீள்கிறது
உன் விழிக் கணைகள் ...

பல பட்டாம் பூச்சியின்
நகர்வுகள் என
உன் மென்மையான
தீண்டலுக்காய்
காதலோடு காத்திருக்கிறது
மங்கை மனது ...
மனம் நீவி வா
மயக்கும் நீ
மயங்கும் நான் ..

No comments:

Post a Comment