Sunday, September 7, 2014

தொலைவுகள் தொலைத்து வா ....



என் நிமிட துளிகளை
நீட்சி கொள்ள வைக்கிறாய்
யுகமாக..
உன் அருகினில்
துயில் கொள்ளாமல்
துவள்கிறது மனது ...

உன் முகத்திருப்பலில்
முடங்கிக் கொள்ளும்
என் புன்னககை
ஓர் பார்வைத் தடவலுக்காய்
பரிதவிக்கிறது ...

வலுவான உன் கரங்களுக்குள்
வனப்புகள் அனைத்தும்
வசமிழக்க துடிக்கிறது
வாவென்று அழைத்துவிடு
வந்துவிடும் உயிர் கொண்டு ...

காத்திருப்பதினிய சுகம்
என் காதலெங்கும் உனது முகம்
கரம் கொண்டு அணைத்துவிடு
காதல் தன்னை பருகிவிடு ..

உன் தோள் வளைவில்
தொலைந்துவிடத் துடிக்கிறேன்
தொலைவுகள் தொலைத்து
வா .....

No comments:

Post a Comment