Sunday, September 7, 2014

வேசித்தனம் .

 
 
உங்கள் மீதான
என் கோபங்களை
ஒருகணம்
நினைந்து கொள்கிறேன் ..

என் உணர்வுகளை
உடைத்ததனால்
அவை
மன்னிப்புக்கு
உகந்ததாக இல்லை ..

மறந்தும்
மனுப் போட்டு விடாதீர்கள்
மரம் என்று
எனை திட்டும் நிலையை கூட
உங்களுக்கு தர
அணுவளவேனும்
ஆசைப்படவில்லை..

உங்கள் கூரிய நகங்களால்
கூறாக
இதயவறைகளை
பிளந்தது போதும்
இனியும் வேண்டாம்
உங்கள்
இனிய புன்னகை சுமக்கும்
வேசித்தனம் .

No comments:

Post a Comment