Monday, May 28, 2012

இது நாள்வரை

 

இது நாள்வரை
என் நெஞ்சம் எனும்
இருள் அறையில்
உனக்காக துடித்த
என் இதயத்தை
இன்று உன் கைகளில்
தந்துவிட்டேன் ....

என்ன ஆச்சர்யம்
உன் கைகளில்
என் இதயம் ...
இழந்தும் ஒளிர்கின்றதே
இதுதான்
இழப்பில் ஓர் உயிர்ப்பா ...?
இல்லை என்
காதலின் ஒளிர்வா ...

பளபளப்பாய் இருப்பதனால்
மிட்டாய் என நினைத்து
மென்று துப்பி விடாதே ..
என்றும் உனக்கு
இனிமையாய் இருப்பேன்
என்பதற்கு இதுதான் அடையாளம் ..
திருப்பி தந்துவிடதே ...
என் இதயமே
எனக்கு சுமையாகிவிடும் ..
எனக்கு தெரியாமல்
எங்காவது எறிந்துவிடு
உன்னிடம் என் இதயம்
உறங்காமல் ஒளிரும்
என்ற நின்மதி கிட்டும் ...

என் இதயத்தின் ஒளிர்வு
உன் கைகளில் சேர்ந்துதான்
என் வாழ்கையின் ஒளிர்வும்
உன் மெய்யது சேர்ந்தால்தான் ...
புரிந்து கொள்வாயா ...?
இல்லை புரிந்தும் கொல்வாயா ...?
 


No comments:

Post a Comment