Monday, May 28, 2012

சிறகுகள் உதிருமுன் வா ...

உன் நினைவுகள் எனும்
ஆணிகள் கொண்டு
என் இதய சிறகுகள்
சிலுவையில் அறையப்பட்டு
சிதிலமாய் கிடக்கின்றது ...

உன்னை உனக்காகவே
நேசித்தவள் ...
உன்னிடம்
உள்ளார்ந்த அன்பை மட்டும்
எதிர் பார்த்தவள் ..
உனக்காக பேசி
உனக்காக அழுது
உனக்காக கோபம் கொண்டு
உனக்காக சிரித்து
உன்னை நினைத்தே
வாழ பழகிவிட்டவள் நான்..

அறிந்து தெரிந்தும்
என்னை அணு அணுவாய்
வதைக்க உன்னால் மட்டுமே முடிகிறது..
ஒவொரு தடவையும்
உன்னால் காயப்பட்ட வடுக்கள்
உன் ஆறுதல் வார்த்தைகள் இன்றியே
அதுவாக ஆறி விடுகிறது
காரணம் உன் மேல் கொண்ட காதலால்






என்ன செய்தால் உனக்கு பிடிக்கும்
எப்படி நடந்தால் உனக்கு பிடிக்கும்
என்ன பேசினால் உனக்கு பிடிக்கும்
இதையெல்லாம் சிந்தித்தே
என் மூளையின் செயல்திறன்
அடிக்கடி ஓய்வுக்கு விண்ணப்பிகின்றது...

ஒவொன்றாக
உனக்காக பார்த்து பார்த்து செய்தாலும்
உன் பார்வையில் அவை
ஏனோ தீண்டத்தகாத செயல்கள் தான் ...
அதுதான் திரும்ப திரும்ப என்னை
சிதிலமாக சிதைகின்றாய்

உன்னை நேசிக்கும் என்னை
என்னை நீ நேசிகாது போனாலும்
என்னை காயப் படுத்தவாவது நீ வேண்டும்
அதனால்தான் உன்னை சுற்றி வருகிறேன் ..

என் இதயத்தை பார்
உன்னால் எத்தனை முறை
கிழிக்க பட்டாலும்
சிலுவையில் அறையப்பட்டாலும்
சிறகடிக்க முடியாது
சிறகுகள் சிறைவைகப்பட்டாலும்
துடிக்கத் தவிக்கிறது ..
அங்கே வாழ்வது நான் அல்ல நீதான்
உன்னால் அடிக்கப்படும்
ஒவோர் ஆணியும்
எனக்குள் இருக்கும் உனக்கு அடிபதுதான் ...
அதனால்தான் என் இதயம்
இன்னும் துடிக்கிறது
உன்னை காப்பதற்காய் ....
என் சிறகுகள் உதிருமுன் வா ...
என் ஜீவன் கருகுமுன் வா ..
என்றோ ஒரு நாள்
என்னிடம் நீ வருவாய்
அன்று உன் இதயத்தை
உன்னிடம் தந்து
உயர பறக்கும் இந்த உயிர் அற்ற இதயமும் ..

No comments:

Post a Comment