Monday, May 28, 2012

புண்ணியம்




கரு விழிகளில் ஏக்கம்
காணும் கனவினில் ஒரு தேக்கம்
புத்தக பைகளை ஏந்தி
புத்தி வளர்க்கும்
புனிதமான இடமாம்
கல்வி சாலை செல்லே வேண்டிய
கதிர்கள் ....
இங்கு பிச்சை பார்த்திரம் ஏந்தி
அன்னம் இடுவோர் அகத்திணை
முகத்தினில் காண ஏங்கி
தவமாய் தவம் இருகின்றன ...

என்ன தவறு செய்தன இக்கதிர்கள்
போசாகின்றியே புதைந்து போக ...
வருடம் ஒன்றில் கேளிக்கை நிகழ்வுக்காக
எத்தனை கோடியை அரசு செலவு செய்கிறது ..
அதை இந்த பிள்ளைகளுக்கு கொடுத்தால்
கஜானாதான் வற்றிவிடுமா ....
இல்லை கணக்குதான் இடித்து விடுமா ...

உண்டி சாலை தனில்
உணவருந்த சென்றேன்
அங்கே ...
கொண்டுவந்த பர்கரை தள்ளி விட்டு
பிசா கேக்கும் குழந்தைக்கு
அதை மறுப்பேதும் சொல்லாமல்
வாங்கிக் கொடுக்கும் பெற்றோரை பார்த்தேன்
ஏனோ எனக்கு இந்த புகைப்படம்
ஞாபகத்திற்கு வந்தது ...

பிறந்த நாள் ஒன்றுக்கு
பல ஆயிரங்களை செலவு செய்யும் பெற்றவர்களே
உங்கள் குழந்தைகள் போல்
பலர் உணவேதும் இன்றி
ஒரு வேளை உணவுக்காய்
வேகாத வெயிலிலும்
தட்டு ஏந்தி நிக்கின்றார்கள் ...
அவர்கள் பசிக்கு ஒரு சில
ஆயிரம் அளித்து
புகையும் வயிற்றினை நிரப்பி
புண்ணியம் கட்டிக் கொள்ளுங்கள்
சிறுவர் மனது இறைவன் வாழும் ஆலயம் ...
சிறுவர் வாழ்த்து உங்கள் குடும்பம் சிறக்கும் கேட்டு .
 
 






No comments:

Post a Comment