Monday, May 28, 2012

நீ வருவாய் என்றால் ...




முழுவதும் எரிகின்றேன்...
உன் முதல் பார்வையில்
பற்றிக்கொண்டது முதல் தீ

அன்பே என்றாய்
ஆனந்தத்தில் பற்றிக் கொண்டது
ஓர் இதழ் ...
அழகே என்றாய்
வெக்கத்தில் பற்றிக்கொண்டது
ஓர் இதழ் ....
நலமா என்றாய்
நச்சென்று பற்றிக்கொண்டது
இதயத்தின் ஓர் இதழ்

எனக்காக நீ என்றும் ..
இந்த எண்ணத்தில்
பற்றிக் கொண்டது ஓரிதழ்

என்னுடன் நீ...
நாணத்தில் பற்றி கொண்டது ஓரிதழ்
எல்லாமே நீ...
அன்போடு பற்றிக் கொண்டது ஓரிதழ்
அருகிலே நீ
விரகத்தில் பற்றிக் கொண்டது ஓரிதழ் ..
வேறு ஒருத்தியோடு நீ ...
கோபத்தில் பற்றிக்கொண்டது ஓரிதழ் ..

காத்திருப்பில் கரையும் மணித்துளிகள்
கவலையில் பற்றிக்கொண்டது ஓரிதழ்..
மிஸ் யு என்ற sms
இந்த உலகை வென்ற எண்ணத்தில்
பற்றிக்க் கொண்டது ஓரிதழ் ...

சூப்பர் ...
உன் பாராட்டில்
பசுமையாகி பற்றிக் கொண்டது ஓரிதழ் ..
உன்னை காணாத பொழுதுகளில்
வெறுமையாக பற்றிக் கொண்டது ஓரிதழ் ...
கண்ணா ....
உன் பெயர் சொல்லும் போதே
முழுமையாக பற்றிக் கொள்ளும்
ரோஜா மலர் நான்....
                                                                                         
உன் அசைவுகளும்
ஆக்கங்களும் ....
பேசும் பார்வையும்
என்னுள் ஆயிரம் இதழ்களை பற்ற வைத்தாலும்
இனிமையாய் எரிகிறேன் .....

.ஆனால் ..
உன் கோபத்தில் மட்டும்
பற்றிக் கொள்ளும் தீ
என் இதழ்களை கருக்குதே .....

என் மேல் கோபம் கொள்ளாதே
முழுவதுமாய் எரிந்து கருகிவிடுவேன்...
இதற்கும் சம்மதம்தான் ...
அணைக்க நீ வருவாய் என்றால் ...


                                                              

Modify message

No comments:

Post a Comment